search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்
    X

    ஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்

    திருமணமாகாத ஆண்கள் திருமணமான பெண்களுடன் டேட்டிங் செல்வதற்கு ஏதோ ஒரு வசதி இருந்தாக வேண்டும். திருமணமான பெண்கள் ஏன் தங்கள் கணவனை ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் உள்ளது..
    திருமணமாகாத ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன்; இந்த கதையை நாம் எண்ணிலடங்கா முறையில் கேள்விப்பட்டிருப்போம். திருமணமாகாத ஆண் ஏன் திருமணமான பெண்களை ஆண்கள் நாட வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம். கேட்க வியப்பாக இருந்தாலும் கூட நடைமுறையில் பல இடங்களில் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    திருமணமாகாத ஆண்கள் திருமணமான பெண்களுடன் டேட்டிங் செல்வதற்கு ஏதோ ஒரு வசதி இருந்தாக வேண்டும். திருமணமான பெண்கள் ஏன் தங்கள் கணவனை ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் உள்ளது. புதிய ஆணுடன் கிடைக்கும் உறவினால் ஏற்படும் கிக்கு, காதலே இல்லாத திருமண வாழ்க்கையில் மாட்டிக் கொண்டது போன்ற பல காரணங்களை இதற்கு கூறலாம்.

    ஆனால் திருமணமாகாத ஆண்கள் ஏன் திருமணமான பெண்களால் வசீகரிக்கப்படுகிறார்கள் என்பது ஏன் என தெரிந்து கொள்ள வேண்டுமா? திருமணமான பெண்களுடன் உறவில் ஈடுபடுவதால் திருமணமாகாத ஆண்களுக்கு பலன் அதிகமே தவிர இழக்க ஒன்றுமே இல்லை. ஆண்களுக்கு பிடிக்காத அர்ப்பணிப்பை தவிர, திருமணமான பெண்களிடம் ஆண்களுக்கு அனைத்தும் கிடைக்கும். திருமணமான பெண்கள் என்றால் ஈகோ இருக்காது; அதே போல் தேவையில்லாத சண்டைகளும் வராது.

    திருமணமாகாத ஆண்களுடன் உறவில் ஈடுபடும் போது தேவையற்ற கோரிக்கைகளையும் எழுப்ப மாட்டார்கள். திருமணமான பெண்கள் மீது திருமணமாகாத ஆண்கள் ஏன் ஈர்ப்பை பெறுகிறார்கள் என்பதற்கான காரணங்கள், இதோ!

    திருமணமாகாத பெண்களுடன் டேட்டிங் செல்வதை விட திருமணமான பெண்களுடன் செல்வது தான் சுலபம். அதற்கு காரணம் அவர்களை ஈர்ப்பது சுலபம். பொதுவாக திருமணமாகாத ஆண்களின் கவனத்தை ஈர்க்க அவர்கள் அதிகம் விரும்புவார்கள்.



    குறுகிய கால உறவு வேண்டும் அல்லது ஒரு நாள் இரவுக்கு மட்டும் வேண்டும் என்ற தேவைப்பாடு இருந்தால், திருமணமான பெண்கள் தான் சரியான தேர்வு. அவர்களுடன் இரவை கழித்த பிறகு மீண்டும் உங்களை எதிர்ப்பார்க்க மாட்டார்கள். அதனால் இது ஆண்களுக்கு வசதியாக இருக்கும்.

    திருமணமாகாத பெண்களுடன் டேட்டிங் சென்றால், அவர்கள் பல விஷயங்களுக்கு கோபமடைந்து சண்டை போடுவார்கள். சண்டைக்கு பிறகு மௌன சிகிச்சை அளித்து, அவர்களை தாஜா செய்ய வேணும் என்று விரும்புவார்கள். ஆனால் திருமணமான பெண்கள் என்றால், உங்கள் சந்திப்பு எப்போதும் ரகசியமாகவும், வேக வேகமாகவும் தான் இருக்கும். அதனால் சண்டை போடவோ, சமாதானம் அடையவோ நேரம் இருக்காது.

    ஒரு உறவில் புதிய அனுபவத்தை அனுபவிக்க திருமணமான பெண் சிறந்த துணையாக இருப்பார்கள். அனுபவமுள்ள பெண்ணிடம் ஆண் நிறைய கற்றுக் கொள்ளலாம். அதனை அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

    திருமணமான பெண்களுக்கு அதிகமாக செலவு செய்ய தேவையில்லை. அவர்கள் விலையுயர்ந்த பரிசுகளை எதிர்ப்பார்ப்பதில்லை. மாறாக புகழ்ச்சியை மட்டுமே எதிர்ப்பார்ப்பார்கள்.

    உங்களுக்காக திருமணமான பெண்கள் தங்கள் கணவனை விட மாட்டார்கள். அலுப்பு தட்டும் திருமண வாழ்க்கையில் இருந்து ஒரு மாறுதல் வேண்டும் என்ற கேவலமான சுகத்திற்காகவே அவர்கள் உங்களை நாடுவார்கள்.

    திருமணமான பெண்கள் திருமணமாகாத ஆண்களை மிரட்ட முயற்சி செய்தால், ஆண்களுக்கு ஒரு பாதிப்பும் ஏற்பட போவதில்லை. ஆனால் ஆண்களோ அந்த பெண்ணின் கணவன், குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் கூறி விடுவதாக மிரட்டலாம். ஆண்களை விட பெண்களே இழப்பதற்கு அதிகம்.

    திருமணமான பெண்களுடன் உறவில் இருக்கும் போது பிற பெண்களுடன் சுற்றக் கூடாது என்ற கட்டுப்பாடில்லை. எந்த ஒரு அர்பணிப்பும் இல்லாததால், அவர்கள் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் டேட்டிங் செல்லலாம்.
    Next Story
    ×