search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கருப்பை கட்டிக்கான ஆயுர்வேத சிகிச்சை
    X

    கருப்பை கட்டிக்கான ஆயுர்வேத சிகிச்சை

    ஹார்மோன் சூழ்நிலை மாறுவதால் கருப்பை கட்டிகள் போன்ற பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. ஆயுர்வேதத்தில் இதற்கான தீர்வை அறிந்து கொள்ளலாம்.


    மகளிர் தம்மைக் கவனித்துக் கொள்ளாமல், நேரம் தவறி உணவு எடுத்துக் கொள்வதால், பாதிப்புகள் அதிகம் வருகின்றன. உணவைச் செரிக்கும் ஹார்மோன் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் அதன் வேலையைச் செய்யும். உணவைக் குறிப்பிட்ட பொருளாக (குளுக்கோஸ்) மாற்றி திசுக்களுக்கு அனுப்பும். நேரந்தவறும் போது உணவு உடைந்து மாறும் பொருள் வேறு வடிவமைப்பில் வேறு பொருளாக மாறுகிறது.

    அதனை திசுக்கள் ஏற்காது. அவை கழிவாக திரும்ப ரத்தத்தில் எடுத்துச்செல்லப்படும். இந்த நிகழ்வு தான் நடக்குமே தவிர திசுக்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காது. அதனால் உடல் சோர்வு அடையும், போஷாக்கு குறைபாடு நேரும். நோய் வரும். ஹார்மோன் சூழ்நிலை மாறுவதால் கருப்பை கட்டிகள் போன்ற பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.

    மூளையின் முக்கிய அங்கம் ஹைப்போதாலமஸ் என்பது, அங்கு உருவாகும் ஹார்மோன்கள் உடலின் எல்லா ஹார்மோன்களையும் கட்டுப்படுத்தும். ஹைப்மோதாலமஸ் ஹார்மோன் எதிர்மறை எண்ணங்களில் பாதிக்கப்பட்டால் பிட்யூட்ரி சுரப்பு பாதிக்கப்படும். அதனால் கருப்பை ஹார்மோன்கள் பாதிக்கப்படும். அதனால் சீக்கிரம் மெனோபாஸ் வரலாம். கருப்பைக்குள்ளேயே கருக்கள் தங்கிவிடும் நிலை ஏற்படும். கரு உருவாகும் கருமுட்டை விரையில் அதிகம் உற்பத்தியாகி உருவாதல் நின்றுபோய் சீக்கிரம் மெனோபாஸ் வரும்.

    மாதவிலக்கு வராத நிலையில்

    எள் 1 தேக்கரண்டி கொள்ளுப்பொடி 1 தேக்கரண்டியை 1 தேக்கரண்டி வெல்லம் கலந்து, 11/2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து 3/4 டம்ளர் ஆகக் குறைந்ததும் பருகலாம்.

    மாதவிலக்கின் போது உதிரப்போக்கு பல நாட்களுக்கு தொடர்ந்து வந்தால்

    4 டம்ளர் தண்ணீருடன் 1 டம்ளர் பால் கலந்து அத்துடன் தென்னம்பூ 1 பிடியை சேர்த்துக்கு கொதிக்கவைத்து 1 டம்ளராக குறைந்ததும் பருகலாம்.

    மாதவிலக்கின்போது கடுமையான வலி இருப்பின் அதை தவிர்க்க


    ப்தஸாரம் கஷாயம்
    தில குலாதாதி கஷாயம்
    ஹிங்குவசாதி சூரணம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

    மூன்று மாதங்களுக்கு மேல் மாதவிலக்கு வராதநிலையில்

    கல்யாணகம் கஷாயம்
    தில குலாதாதி கஷாயம்
    ஸ்ப்தஸாரம் கஷாயம்
    ராஜப்ரவர்த்தினி குளிகா ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

    மாதவிலக்கு பிரச்சனை உள்ள மகளிர் பிரச்சனைகளுடன் சேர்ந்து மெலிந்த உடல்வாகுடன் இருந்தால்


    அமிர்தப்ரஷாக்ருதம்
    தாத்ரயாதி க்ருதம்
    ஸதா வரயாதி க்ருதம் ஆகியனவும்
    பருமனான உடல்வாகுடன் இருந்தால்
    வாரணாதி கஷாயம்
    காஞ்சரண குளிகா

    கனஸ தாவடி கஷாயம் ஆகியனவும் பயன்படுத்தலாம்.

    அதிகமான உதிரப்போக்கு தொடர்ந்தால்
    முசலி கடிரடி கஷாயம்
    திராசாஷாதி கஷாயம்
    அசோகா அரிஷ்டம்
    அசோகா க்ருதம்
    புஷ்ய நுக சூரணம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

    கருமுட்டை கட்டிகள் தவிர ஏற்கனவே உடலில் வேறு நோய்கள் இருப்பின் மருந்து எடுக்கும் போது அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் செயல்படுத்தல் வேண்டும்.

    மருந்துகள் தவிர முறையாக உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி சரியான உணவு முறை, நேரந்தவறாமை, போன்றவற்றையும் சேர்த்துக் கைப்பிடித்தல் ஆரோக்கியம் மேம்படும்

    நோய் வந்தபின் இவற்றையேல்லாம் யோசிக்காமல் குழந்தை பருவத்திலிருந்தே இவற்றை அனுசரிக்கும் பழக்கத்தை கொண்டு வருவது பெற்றோரது கடமையாகும்.

    குழந்தைக்கு கல்வி செல்வம் ஆகியனவைப் பெற்றுத்தர அவையில் முந்தி இருக்க செய்யும் அளவு உடல் ஆரோக்கியம் பேணப்படுவது பற்றிய அறிவு விழிப்புணர்வு மிகவும் குறைவு. ஆகவே அதை ஒரு சமூக கடமையாக எடுத்துக்கொள்ளப்படுவது எதிர்கால இந்தியாவின் ஆரோக்கியத்துக்குத் தேவை!

    -டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422-2367200, 2313188, 2313194)
    Next Story
    ×