என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்
Byமாலை மலர்31 Jan 2018 3:59 AM GMT (Updated: 31 Jan 2018 3:59 AM GMT)
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு குடும்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் பிரச்சினையாலோ மன அழுத்தம் அதிகரிக்கும்.
கர்ப்பிணிகளுக்கு குடும்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் பிரச்சினையாலோ மன அழுத்தம் அதிகரிக்கும். இதை ப்ரிபார்டம் டிப்ரஷன் (Prepartum Depression) என அழைப்பர். உலளவில் 20 சதவீத கர்ப்பிணிகள் இந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் உண்மையான எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
உடல் சோர்வு, பதற்றம், கவனக்குறைவு, தேவையின்றி ஏற்படும் பயம், எதிலும் விருப்பம் இல்லாமல் இருப்பது, அதிகமாக எரிச்சலடைவது, தூக்கமின்மை, குற்றவுணர்ச்சி, சோகமாக இருப்பது, அதிகப்படியான எடை அதிகரிப்பு அல்லது குறைவது, உணவு சாப்பிடாமல் இருப்பது அல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது போன்ற பல அறிகுறிகள் ஏற்படும்.
சிலருக்கு தற்கொலை எண்ணங்களும் கூட தோன்றலாம். நம் நாட்டில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவு. அதன் காரணமாக பலர் பெண்கள் சந்திக்கும் இந்தப் பிரச்சனைகளை பெரிதாக கவனிப்பதில்லை.
இத்தகைய மன உளைச்சல்கள் கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும். எனவே குடும்பத்தினர் கர்ப்பிணிகளின் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மன அழுத்தத்தை குறைக்க குடும்பத்தாரிடம் கர்ப்பிணிகள் மனம் விட்டு பேச வேண்டும். தங்களுக்கு உள்ள பயத்தை பற்றிப் பேசி தெளிவு பெற வேண்டும். இதற்கு குடும்பத்தாரும் அனுசரனையாக இருக்க வேண்டும்.
பெண்களின் மன அழுத்தம் குறைய வீட்டில் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும். வழிப்பாட்டு தலங்கள், பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றிக்கு செல்லலாம். தேவைப்பட்டால் மனநல ஆலோசகரிடம் போகலாம்.
இந்த மன அழுத்தத்தை கவனிக்காமல் விட்டால் பிறகு குழந்தை பிறந்த பின்பும் தாய்மார்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். இது குழந்தை வளர்ப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஊட்டச்சத்தும் மகிழ்ச்சியான சூழலும் தேவை என்பதால்தான் நம் நாட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படுகிறது.
வளைகாப்பு நிகழ்ச்சியில் சொந்தங்கள் சூழ்ந்திருக்க, தாய்மை அடைய போகும் பெண்ணுக்கு அழகழகான கண்ணாடி வளையல்களை அணிவித்து மகிழ்வர். வகை வகையான உணவு வகைகளை சமைத்து பரிமாறுவர். இதனால் அப்பெண்ணுக்கு மகிழ்ச்சியும் மன தைரியமும் ஏற்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X