என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சாதத்திற்கு அருமையான இறால் வறுவல்
Byமாலை மலர்28 March 2018 7:01 AM GMT (Updated: 28 March 2018 7:01 AM GMT)
சாதம், சப்பாத்தி, புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள இறால் வறுவல் சூப்பராக இருக்கும். இன்று இந்த இறால் வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இறால் - 1/4 கிலோ
வெங்காயம் - 2 (பெரியது).
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
சோம்பு - ஒரு தேக்கரண்டி.
சீரகம் - ஒரு தேக்கரண்டி.
தக்காளி - 2 பழம்.
தேங்காய் - கால் மூடி (துருவியது).
உப்பு - 1 தேக்கரண்டி.
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி.
எண்ணெய் - 2 தேக்கரண்டி.
கறிவேப்பிலை - ஒரு கையளவு.
வத்தல் மிளகாய் - 20 (பெரியது)
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தோல், ஓடு நீக்கி இறாலை நன்கு சுத்தம் செய்து [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
தேங்காய் துருவலையும் 15 வத்தல் மிளகாயையும் சோம்பு, சீரகத்துடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயம், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் இறாலை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.
இறாலில் மசால் பிடித்தவுடன் தாளிப்பு கரண்டியில் சிறிது எண்ணெய் விட்டு 5 வத்தல் மிளகாயை வெட்டிப் போட்டு கொஞ்சம் கறிவேப்பிலை தூவி தாளித்தபின் அதனை இறக்கி வைத்துள்ள இறால் வறுவலின் மேல் ஊற்றி சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.
சூப்பரான இறால் வறுவல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இறால் - 1/4 கிலோ
வெங்காயம் - 2 (பெரியது).
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
சோம்பு - ஒரு தேக்கரண்டி.
சீரகம் - ஒரு தேக்கரண்டி.
தக்காளி - 2 பழம்.
தேங்காய் - கால் மூடி (துருவியது).
உப்பு - 1 தேக்கரண்டி.
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி.
எண்ணெய் - 2 தேக்கரண்டி.
கறிவேப்பிலை - ஒரு கையளவு.
வத்தல் மிளகாய் - 20 (பெரியது)
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தோல், ஓடு நீக்கி இறாலை நன்கு சுத்தம் செய்து [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
தேங்காய் துருவலையும் 15 வத்தல் மிளகாயையும் சோம்பு, சீரகத்துடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயம், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் இறாலை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.
இறாலில் மசால் பிடித்தவுடன் தாளிப்பு கரண்டியில் சிறிது எண்ணெய் விட்டு 5 வத்தல் மிளகாயை வெட்டிப் போட்டு கொஞ்சம் கறிவேப்பிலை தூவி தாளித்தபின் அதனை இறக்கி வைத்துள்ள இறால் வறுவலின் மேல் ஊற்றி சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.
சூப்பரான இறால் வறுவல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X