என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
உடலுக்கு ஆரோக்கியம் தரும் நடைப்பயிற்சி
Byமாலை மலர்20 March 2018 3:40 AM GMT (Updated: 20 March 2018 3:40 AM GMT)
உடற்பயிற்சி என்பது வேகமாக ஓடுவது, கை கால்களை ஆட்டுவது மட்டுமே அல்ல. நடைபயிற்சியும் சிறந்த உடற்பயிற்சி தான்.
இயற்கையான உணவு, நல்ல உடற்பயிற்சி, நல்ல தூக்கம் இம்மூன்றும் இருந்தால் நோயின்றி நூறாண்டு வாழலாம். ஓடி ஆடி வேலை செய்வதே நல்ல உடற்பயிற்சி தான். ஆனால் அவை மனதிற்கும் உடலுக்கும் சிறந்த பயிற்சி ஆகாது. தினமும் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் உடற்பயிற்சி செய்வது நல்லது. நேரம் கிடைக்காதவர்கள் மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி என்பது வேகமாக ஓடுவது, கை கால்களை ஆட்டுவது மட்டுமே அல்ல. நடைபயிற்சியும் சிறந்த உடற்பயிற்சி தான்.
நடைப்பயிற்சி :
* நடை ஒரு நல்ல உடற்பயிற்சி. கடின உழைப்பாளிகளுக்கும் தினமும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும், நடைப்பயிற்சி தேவையில்லை.
* சிலர் அருகில் உள்ள தெருக்கள் மற்றும் கடைகளுக்கு செல்ல மோட்டர் வாகனங்களை உபயோகப்படுத்துகின்றனர். இதனால் நடை என்பது இன்று அரிதாகிப்போன விஷயமாகிவிட்டது.
* தினமும் காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
* 40 வயதை கடந்தவர்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
* காலைக் காற்றில் ஓசோன் மண்டலத்தில் ஆக்ஸிஜன் அதிகமாக நிறைந்திருக்கும். இந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது நல்லது.
* வேகமாக நடக்கக் கூடாது. மெதுவாக நடந்தால் போதும்.
* அவரவர் உடல் நிலைக்குத் தக்கபடி அரை மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நடக்கலாம்.
* நடக்கும் போது பேசிக்கொண்டோ, பாடல் கேட்டுக்கொண்டோ நடக்கக்கூடாது.
* கைகள் இரண்டையும் வீசிக்கொண்டு நடப்பது நல்லது.
* இறுக்கமான உடைகள் அணியக் கூடாது.
* தினமும் 3 கி.மீ தூரமாவது நடக்க வேண்டும்.
* இரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகள் அதிக மூச்சு வாங்கும்போது சிறிது நேரம் அமர்ந்து பின் எழுந்து நடக்கலாம்.
* இரவில் தூக்கமில்லாதவர்கள் மறுநாள் காலையில் நடக்கக்கூடாது.
* புதிதாய் நடைப்பயிற்சி செய்பவர்கள் ஆரம்பத்தில் 1 கி.மீ தூரம் நடந்தால் போதும்.
* கடற்கரைக்கோ, மலைப் பிரதேசங்களுக்கோ செல்லத் தேவையில்லை. வீட்டிற்கு அருகே குறுநடை போட்டால் போதும்.
* சிறிது நேரம் அமைதியாக காற்றோட்ட முள்ள இடத்தில் அமர்ந்து தியானம் செய்வது போல் சுவாசிக்க வேண்டும்.
நடைப்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்:
* நடைப்பயிற்சி செய்யும்போது உடம்பில் உள்ள அசுத்த நீரானது வியர்வை மூலம் வெளியேறும்.
* சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் நெருங்காது.
* உடம்பின் எல்லா பாகங்களுக்கும் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும்.
* அமைதியாக நடக்கும்போது மனம் ஒருநிலைப்பட்டு சிந்தனை சக்தியைத் தூண்டும்.
* மூளைக்கு ரத்தம் செல்வதால் எப்போதும் புத்துணர்ச்சி பெறச் செய்யும். இனியும் கால தாமதம் செய்யாமல் உடனே நடக்கச் செல்லுங்கள், சோம்பேறித்தனத்தை விரட்டி எளிய நடைப்பயிற்சி மூலம் நோயின்றி வாழலாம்
நடைப்பயிற்சி :
* நடை ஒரு நல்ல உடற்பயிற்சி. கடின உழைப்பாளிகளுக்கும் தினமும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும், நடைப்பயிற்சி தேவையில்லை.
* சிலர் அருகில் உள்ள தெருக்கள் மற்றும் கடைகளுக்கு செல்ல மோட்டர் வாகனங்களை உபயோகப்படுத்துகின்றனர். இதனால் நடை என்பது இன்று அரிதாகிப்போன விஷயமாகிவிட்டது.
* தினமும் காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
* 40 வயதை கடந்தவர்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
* காலைக் காற்றில் ஓசோன் மண்டலத்தில் ஆக்ஸிஜன் அதிகமாக நிறைந்திருக்கும். இந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது நல்லது.
* வேகமாக நடக்கக் கூடாது. மெதுவாக நடந்தால் போதும்.
* அவரவர் உடல் நிலைக்குத் தக்கபடி அரை மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நடக்கலாம்.
* நடக்கும் போது பேசிக்கொண்டோ, பாடல் கேட்டுக்கொண்டோ நடக்கக்கூடாது.
* கைகள் இரண்டையும் வீசிக்கொண்டு நடப்பது நல்லது.
* இறுக்கமான உடைகள் அணியக் கூடாது.
* தினமும் 3 கி.மீ தூரமாவது நடக்க வேண்டும்.
* இரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகள் அதிக மூச்சு வாங்கும்போது சிறிது நேரம் அமர்ந்து பின் எழுந்து நடக்கலாம்.
* இரவில் தூக்கமில்லாதவர்கள் மறுநாள் காலையில் நடக்கக்கூடாது.
* புதிதாய் நடைப்பயிற்சி செய்பவர்கள் ஆரம்பத்தில் 1 கி.மீ தூரம் நடந்தால் போதும்.
* கடற்கரைக்கோ, மலைப் பிரதேசங்களுக்கோ செல்லத் தேவையில்லை. வீட்டிற்கு அருகே குறுநடை போட்டால் போதும்.
* சிறிது நேரம் அமைதியாக காற்றோட்ட முள்ள இடத்தில் அமர்ந்து தியானம் செய்வது போல் சுவாசிக்க வேண்டும்.
நடைப்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்:
* நடைப்பயிற்சி செய்யும்போது உடம்பில் உள்ள அசுத்த நீரானது வியர்வை மூலம் வெளியேறும்.
* சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் நெருங்காது.
* உடம்பின் எல்லா பாகங்களுக்கும் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும்.
* அமைதியாக நடக்கும்போது மனம் ஒருநிலைப்பட்டு சிந்தனை சக்தியைத் தூண்டும்.
* மூளைக்கு ரத்தம் செல்வதால் எப்போதும் புத்துணர்ச்சி பெறச் செய்யும். இனியும் கால தாமதம் செய்யாமல் உடனே நடக்கச் செல்லுங்கள், சோம்பேறித்தனத்தை விரட்டி எளிய நடைப்பயிற்சி மூலம் நோயின்றி வாழலாம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X