search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவிடைமருதூர் பற்றிய 41 வழிபாட்டு தகவல்கள்
    X

    திருவிடைமருதூர் பற்றிய 41 வழிபாட்டு தகவல்கள்

    சிவபெருமானின் 64 வடிவங்களுள் ராவண அனுக்கிரக மூர்த்தி அமைந்துள்ள திருத்தலம் திருவிடை மருதூர் மட்டுமே. இந்த கோவில் பற்றிய 41 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    1. திருவிடைமருதூருக்கு செண்பகராண்யம், சக்திபுரம், தபோவனம், முக்திபுரம் ஆகிய பேர்கள் உண்டு.

    2. மருத மரத்தை தல விருட்சகமாக கொண்ட 3 தலங்களில் இந்த தலம் நடுவில் அமைந்து இருப்பதால் இடைமருதூர் என்ற பெயரும் உண்டு.

    3. இத்தலத்தில் அகத்தீஸ்யர்லிங்கம், காஸ்யபர் லிங்கம், சோழ லிங்கம், சேர லிங்கம், பாண்டிய லிங்கம், சகஸ்சர லிங்கம், பஞ்ச பூத லிங்கங்கள் என்று திரும்பிய திசையெல்லாம் லிங்க மயமாக காட்சி அளிக்கிறது. ஆலயத்துக்குள் 30-க்கும் மேற்பட்ட லிங்கங்கள் உள்ளன.

    4. இந்த தலத்தில் லிங்கங்களுக்கு அடுத்தப்படியாக விநாயகர் சிலைகளும் அதிகப்படியாக இருக்கின்றன.

    5. தமிழ்நாட்டில் உள்ள பெரிய தேர்களில் இந்த தலத்து தேரும் ஒன்று. இங்குள்ள தேர் 89 அடி உயரம் கொண்டது.

    6. இத்தலத்தின் கொடி மரம் 24 அடி உயரம் கொண்டது.

    7. சிவாலயங்களில் வலது பக்கம் அம்பிகை சன்னதி அமைந்திருந்தால் அந்த ஆலயம் திருமண கோலதலமாக கருதப்படும். அந்த வகையில் திருவிடைமருதூர் தலம் திருமணகோல தலமாக உள்ளது.

    8. தஞ்சை மாவட்டத்தில் உள்ள காரிய சித்தி தலங்களில் மனநோய் நீக்கும் தலமாக திருவிடைமருதூர் தலம் கருதப்படுகிறது.

    9. விபண்டக முனிவர் முன் தோன்றி சிவபெருமானிடம் வருடந்தோறும் தைப்பூச நாளன்று காவிரிக் கரையில் உள்ள கல்யாண தீர்த்தத்தில் நீராடியவர்கள் பாவம் நீங்கி இன்புற்று வாழ வேண்டும் என்று வேண்டினார். இறைவனும் அவ்வாறே ஆகுக! என்று வரம் அருளினார்.

    10. தஞ்சை மாவட்ட ஆலயங்களில் திருவிடை மருதூர் ஆலயத்துக்குதான் அதிக பாடல்கள் கொண்ட தலபுராணம் உள்ளது. இந்த ஆலயம் பற்றி ஞானக்கூத்த சிவபிரகாச தேசிகர் என்பவர் மூவாயிரம் பாடல்கள் தலபுராணமாக பாடியுள்ளார்.

    11. தஞ்சை மாவட்ட சமய இலக்கியங்களில் திருவிடை மருதூர் தலபுராணம், திருவிடை மருதூர் உலா, திருவிடை மருதூர் மும்மணிக்கோவை, திருவிடை மருதூர் கலம்பகம், திருவிடை மருதூர் நொண்டி நாடகம் முக்கியமானவை.

    12. சிவபெருமானின் 64 வடிவங்களுள் ராவண அனுக்கிரக மூர்த்தி அமைந்துள்ள திருத்தலம் திருவிடை மருதூர் மட்டுமே.

    13. தஞ்சை மாவட்டத்தில் 100-க்கும் அதிகமான பாடல்களை பெற்ற தலங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று திருவையாறு, மற்றொன்று திருவிடை மருதூர்.

    14. தஞ்சை மாவட்டத்தில் 4 திசைகளிலும் நான்கு கோபுரங்கள் அமையப்பெற்ற தலங்கள் இரண்டு. ஒன்று கும்பகோண கும்பேஸ்வரர் கோவில். மற்றொன்று திருவிடை மருதூர்.

    16. சோழ நாட்டில் காவிரித் தென்கரையில் இருக்கும் 128 தலங்களுள், இத்தலம் முப்பதாவதாகப் போற்றப்படுகிறது.

    17. திருவிடைமருதூரில் தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோவில்கள் உள்ளன.

    18. வைகாசி வசந்த விழா, அறுபத்து மூவர் விழா, நவராத்திரி விழா, மார்கழித் திருவாதிரை ழிழா, தைப்பூசத் திருவிழாவின் போது சுவாமி காவிரிக்கு எழுந்து அருளி ஐராவணத் துறையில் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பானது.

    19. திருவிடைமருதூர் தலத்தில் காமீகாகம முறையில் நான்கு கால பூஜை நடத்தப்படுகிறது.

    20. இத்தலம் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்து இருக்கும்.

    21. இத்தலம் சண்பகாரணியம், சத்திபுரம், தபோவனம், ஜோதிநகர், சர்வதீர்த்தபுரம், வில்வாரணியம், தருமவிருத்திபுரம், முத்திபுரம், பூலோக சிவலோகம், வீரசோழநகரம் முதலிய காரணப்பெயர்களைக் கொண்டு விளங்குகிறது.

    22. உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியர், கோடி உருத்திரர், விஷ்ணு, சந்திரன், பிரமாதி தேவர்கள், இலக்குமி, சரஸ்வதி, மூன்று கோடி முனிவர்கள் முதலியேர் பெருமானை பூசித்து பேறு பெற்றுள்ளனர்.

    23. இத்தலத்தில் மகாலிங்கப் பெருமானுக்கு பூசை நடந்தபிறகே விநாயகப் பெருமானுக்கு பூசை நடைபெரும்.

    24. இத்தலம் சந்திரனுக்குரிய தலமாகவும், வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து பெருமானை வழிபட்டு புரமஹத்தி தோஷம் நேங்கப் பெற்றதால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திரத் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

    25. இத்தலம் காசிக்கு நிகரான தலமாகும்.

    26. பத்திரகிரியார் முத்தி பெற்ற திருத்தலம்.

    27. இத்தலப் பெருமையினை சிவரகஸ்யம், ஸ்காந்தம், இலிங்கப்புராணம், பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.
    28. இத்தலத்தில் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்புடையது.

    29. சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர் ஆகியோர் இத்திருக் கோவிலைத் திருப்பணி செய்துள்ளனர்.

    30. இந்த கோவிலில் சோழர்காலக் கல்வெட்டுகள் பல உள்ளன.

    31. இத்தலத்தின் தலவிநாயகர் ஆண்ட விநாயகர்.

    32. இத்தலத்தில் சுவாமி, அம்பாள் இருவரது சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை.

    33. தமிழ்நாட்டிலே மகாலிங்கேஸ்வரர் திருத்தேர் மூன்றாவது பெரியத் தேர்.

    34. பட்டினத்தார் மற்றும் பத்திரகிரியார் ஆகியோர்க்கு கிழக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்களில் சன்னதி உள்ளது.

    35. திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதி மங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி ஆகிய தலங்களாகும்.

    36. இங்கு 27 நட்சத்திரங்களுக்கும் 27 இலிங்கங்கள் உள்ளன.

    37. இங்குள்ள நவக்கிரக விக்கி ரகங்கள் பிற கோவிகளிலும் வேறுபட்டதாக இடம் மாறி அமைந்துள்ளது

    38. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 9 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது.

    39. இத்திருக்கோவிலில் நடைபெறும் தைப்பூசப் பெருவிழா மிகவும் தொண்மை வாய்ந்த விழாவாக அனைத்து ஊர் பக்தர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    40. தைப்பூசத்தினத்தன்று விபண்டருக்குக் காட்சி அளித்ததால் இத்தலத்திற்கு இந்நாள் விசேமானது.

    41. கந்த புராணம், இலிங்க புராணம், பிரமகைவர்த்தம், சிவரகசியம் முதலிய நூல்களும் இத்திருத்தலப் பெருமைகளைக் கூறுகின்றன.
    Next Story
    ×