search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruvidaimaruthur"

    • அர்ச்சுனம் என்னும் வடசொல்லுக்கு மருதமரம் என்று பொருள்.
    • அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம்.

    வடக்கே வடுகநாட்டிலுள்ள மல்லிகார்ச்சுனத்திற்கும் ஸ்ரீ சைலம் , தெற்கே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருப்புடைமருதூர்க்கும் (புடார்ச்சுனம்)இடையில் இத்தலம் இருப்பதால் இதற்கு இடைமருது (மத்தியார்ச்சுனம்) எனும் பெயர் அமைந்தது.

    அர்ச்சுனம் என்னும் வடசொல்லுக்கு மருதமரம் என்று பொருள்.

    இம்மூன்று தலங்களிலும் தலவிருட்சம் மருத மரமே. சனிபகவான், சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

    காசிப முனிவர்க்கு இடைமருதீசனாகிய மருதவாணர் பால கண்ணனாகக் காட்சி தந்துள்ளார்.

    பட்டினத்தாரின் சீடர் பத்திரகிரியாருக்கும் அவரது சீடருக்கும் முக்தி கிடைத்த தலம்.

    பட்டினத்தார் இத்தலம் குறித்து பல பாடல்கள் பாடியுள்ளார். அப்பர், சுந்தரர்,ஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர் என்று நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்.

    அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம்.

    அனுஷ நட்சத்திரத்திற்கு இது பரிகார தலம்.

    • மூலவரான மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.
    • கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.

    மூலவரான மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.

    கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.

    இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும்.

    மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

    அப்பர்,சுந்தரர்,ஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர் என்று நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்.

    • ஒரு மண்டலம், அரை மண்டலம், கால் மண்டலம் என்று வரையறை செய்து கொண்டு வலம் வருதல் வேண்டும்.
    • திருக்கார்த்திகை தீபம் மற்றும் தை மாத விழாவில் வலம் வருவோர் பெரும் பயன் அடைவர்.

    திருவிடைமருதூரில் மருதப் பெருமானை வழிபடுவதற்குக் கோவிலையடைந்து முதல் மதிலின் உட்புறத்தில் வலம் வருதலை அசுவமேதப் பிரதட்சிணம் என்பர்.

    இந்த அசுவமேதப் பிரதட்சிணம் செய்வோர் எல்லா நலன்களும் பெறுவர். தொடங்குங்கால் முருகப்பெருமானை வழிபட்டுத் தொடங்க வேண்டும்.

    ஒரு மண்டலம், அரை மண்டலம், கால் மண்டலம் என்று வரையறை செய்து கொண்டு வலம் வருதல் வேண்டும்.

    வலம் வருவதும் நூற்றி எட்டு, இருபத்து நான்கு, பன்னிரண்டு, ஏழு என்ற அளவில் அமைய வேண்டும்.

    திருக்கார்த்திகை தீபம் மற்றும் தை மாத விழாவில் வலம் வருவோர் பெரும் பயன் அடைவர்.

    இதனை அடுத்துள்ளது கொடுமுடிப்பிரகாரம்.

    கயிலாய மலையை வலம் வருவதாலாகும் பேறு இப்பிரகாரத்தை வலம் வருதலால் கிடைக்கும்.

    • கோவிலின் உட்பிராகாரத்தில் சுவாமி சன்னதிக்கு தெற்குப் புறம் ஆண்ட விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.
    • இந்த விநாயகக் கடவுள் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை பூஜித்து வருகிறார்.

    கோவிலின் உட்பிராகாரத்தில் சுவாமி சன்னதிக்கு தெற்குப் புறம் ஆண்ட விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.

    இந்த விநாயகக் கடவுள் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை சிறப்பாகப் பூஜித்து வருகிறார்.

    தேவ கணங்கள் குறையாமல் கொண்டு வந்து அளிக்கும் பூஜைப் பொருட்களைக் கொண்டு மிகவும் விசேஷமாக இறைவனை வழிபடுகிறார்,

    மனித சஞ்சாரம் இல்லாத இந்த இடத்தில், தமது அருட்சக்தியால் விநாயகர் உலகத்தை ஆண்டு வருவதால்

    இவருக்கு ஆண்ட விநாயகர் என்ற காரணப் பெயர் உண்டு.

    • இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
    • இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம்

    இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும்.

    இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

    அஸ்வமேதப் பிரகாரம்:

    இது வெளிப் பிரகாரமாகும்.

    இந்தப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.

    கொடுமுடிப் பிரகாரம்:

    இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும்.

    இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

    ப்ரணவப் பிரகாரம்:

    இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும்.

    இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    • கல்யாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தம் சக்தி வாய்ந்தது.
    • மேலும் இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கிறது.

    கல்யாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தம் சக்தி வாய்ந்தது.

    தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம் என்பர்.

    இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் வரலாறும் உண்டு.

    இப்புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும், சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது.

    பூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவா பரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்து போனான்.

    பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முகதி பெற்றான் என்று ஆலய வரலாறு கூறுகிறது.

    மேலும் இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கிறது.

    பிரமஹத்தி தோஷம், நட்சத்திர தோஷம், சந்திர திசை, சந்திர புத்தி இவற்றால் ஏற்படும் தோஷம், சனிதிசை, ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமத்து சனி இவற்றால் ஏற்படும் தோஷம் யாவும் தீர்க்கும் தலமாக திருவிடைமருதூர் விளங்குகிறது.

    இக்கோவிலில் நடுநாயகமாக ஸ்ரீ மகாலிங்கப் பெருமான் விளங்குகின்றார் என்பது சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.

    ஆலய அமைப்பு முறைப்படி

    திருவலஞ்சுழி-விநாயகர் ,

    சுவாமிமலை-முருகன் ,

    சேய்ஞலூர்-சண்டேசுரர் ,

    சூரியனார்கோவில்-சூரியன்

    முதலான நவகோள்கள்,

    சிதம்பரம்-நடராஜர் ,

    சீர்காழி-பைரவர்,

    திருவாவடுதுறை-திருநந்தி

    ஆகிய பரிவாரத் தலங்களுடன் அவற்றின் நடுவில் மூல மூர்த்தியாக இக்கோவிலில் நடுநாயகமாக ஸ்ரீ மகாலிங்கப் பெருமான் விளங்குகின்றார் என்பது சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.

    • இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சன்னதி உள்ளது.
    • இக்கோவிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோவிற் கோபுர அமைப்பில் அமைந்து விளங்குகிறது.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோவிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமரூதூர் மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள்.

    இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சன்னதி உள்ளது.

    வேறு எங்கும் இல்லை.

    தனி சன்னதி இங்கு மட்டுமே. இக்கோவிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்குபக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது.

    இக்கோவிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோவிற் கோபுர அமைப்பில் அமைந்து விளங்குகிறது.

    இந்த சன்னதியில் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    • இறைவன் உமையின் தவத்திற்கு இரங்கி உமைக்கும் முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார்.
    • காட்சி தந்து விட்டு ஜோதி லிங்கத்தை இறைவனே வழிபடலானார்.

    அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்து உமாதேவியை நினைத்து தவம் செய்தார்.

    உமையும் முனிவர்க்கு காட்சி தந்தார்.

    முனிவர்கள் முறைப்படி இறைவியை வழிபட்டு விட்டு இறைவனையும் காண வேண்டும் என்று கூற உமையம்மை முனிவர்களுக்காக இறைவனை எண்ணி சிவதவமிருந்தார்.

    இறைவன் உமையின் தவத்திற்கு இரங்கி உமைக்கும் முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார்.

    காட்சி தந்து விட்டு ஜோதி லிங்கத்தை இறைவனே வழிபடலானார்.

    வியப்பு கொண்டு உமையம்மை இறைவனே பிரம்மன் முதலானோரே தங்களை வழிபடுவதுதான் முறை.

    தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களே என்று வினவ உமையே பூசித்தோனும் பூசையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே.

    நம்மை நாமே பூசிப்பதற்கு காரணம் இம்முனிவர்கள் நம்மைப் பூசிக்க மறந்துவிட்டனர்.

    அதனாலே பூசிக்கிறேன் என்றார்.

    முனிவர்களும் அன்று தொடங்கி இப்பெருமானை காமிகாவிதிப்படி பூஜை செய்து பெரும் பேறு பெறுவாராயினர் என்று தல வரலாறு கூறுகிறது.

    திருவிடைமருதூரில் மேற்கு திசையில் அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு.

    திருவிடைமருதூரில் மேற்கு திசையில் அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு.

    மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழிபாடுகளைச் செய்து,

    மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால்

    மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.

    சில வழிபாட்டு சடங்கு செய்யும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    * உருவச் சிதைவுள்ள பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது. பின்னம் (சிதைவு) உள்ள விக்கிரகங்களை வைத்து வழிபடக் கூடாது. அப்படி வழிபட்டால், அதோடு அதே போன்ற நல்ல விக்கிரகம் ஒன்றையும் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    * அட்சதை தூவும் பொழுது (திருமணவீட்டில்) உடையாத முழு அரிசியாக இருக்கவேண்டும்.

    * கோவில் மணி, சங்கு, அடுப்பு, தாலிச்சரடு போன்றவை உடைந்தால் அதன் சக்தி இழந்து போய் விடும். எனவே அவற்றை உடனடியாக மாற்றிவிட வேண்டும்.

    * துளசி இலைகளை கொத்துக் கொத்தாக வழிபாட்டிற்கு கொடுக்க வேண்டும். உதிர்த்துக் கொடுக்கக் கூடாது.

    * சுமங்கலிப் பெண்களுக்கு விருந்து வைக்கும் பொழுது, வாழை இலை கிழிந்திருக்கக் கூடாது.

    * சான்றோர்களுக்கு விருந்தளிக்கும் பொழுது, நுனி இலைபோட்டு பரிமாற வேண்டும்.

    * சிரார்த்த சடங்கு, ருது சடங்கு, புனிதச் சடங்கு மற்றும் விரத நாட்களில், கிழிந்த ஆடை, பழைய ஆடைகளை அணியக்கூடாது.
    காவிரிக் கரையில் அமைந்துள்ள ஆலயங்களில் ஆறு சிவதலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்று திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.
    காவிரிக் கரையில் அமைந்துள்ள ஆலயங்களில் ஆறு சிவதலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்று திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஆகும். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமைவாய்ந்ததாக உள்ள இந்த கோவில் நீண்ட 3 பிரகாரங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையாலும் சிறப்புடையது திருஇடைமருதூர். இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதின பரிபாலனத்தில் விளங்குகிறது. “ஈசன் உறைகின்ற இடைமருது” என்று திருஞான சம்பந்தரால் போற்றிப் பாடப்பெற்ற இத்திருத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடையது. இத்தலம் ‘மத்தியார்கள் சேத்திரம’ என்று போற்றப்படுகிறது. மருத மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட திருத்தலம்.

    “திருவாரூர் தேரழகு, வேதாரண்யம் விளக்கழகு, திருவிடை மருதூர் தெருவழகு” என்று கூறுவது வழக்கம். அதற்கிணங்க இங்கு தெருக்களின் அமைப்பு சிறப்பான ஒன்றாகும்.

    இத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் அருள்மிகு ஸ்ரீமகாலிங்கப் பெருமான் ஆவார். அம்மையார் பெயர் பெருநலமா முல்லையம்மை.
    இத்தலத்தில் தேரோடும் வீதிகளில் கோடியில் விநாயகர் ஆலயமும், கீழை வீதியில் ஸ்ரீ விசுவநாதர் ஆலயமும், தெற்கு வீதியில் ஸ்ரீ ஆத்மநாதர் ஆலயமும், மேல வீதியில் ஸ்ரீ ரிஷிபுரீசுவரர் ஆலயமம், திருமஞ்சன வீதியில் (வடக்கு வீதி) ஸ்ரீ சொக்கநாதர் ஆலயமும் அமைந்து நடுவில் ஸ்ரீ மகாலிங்கப் பெருமான் திருக்கோவில் அமைந்துள்ளதால் இது பஞ்சலிங்கத் தலம் எனவும் அழைக்கப்படுகிறது.

    ஒரு சமயம் மகாதேவர் தமது ஞானசக்தியாகிய உமா தேவியாருக்கு ஆகமங்களை உபதேசிக்க, அன்னையார் அவற்றையெல்லாம் திருவுளங்கொண்டு மகிழ்ந்து ஏற்று இறைவனை வணங்கி, “பிரபோ! இவ்வுலக வளங்களையும் அதற் கொப்ப ஆன்மாக்கள் வழிபட்டு உய்ய தேவரீர் எழுந்தருளிச் சிறப் பிக்கும் தலங்களையும் அவற்றில் உயர்ந்ததாக- சிறந்ததாக விளங் கும் ஒன்றைக் காட்டியருள வேண்டுகிறேன்” என வேண்டினாள்.

    சிவபெருமான் அதை ஏற்று, ரிஷபாரூடராய்க் கைலாயத்தினின்றும் புறப்பட்டு எல்லாத் தலங்களையும் காட்டி, காவிரியின் தென்கரையில் உள்ள இந்த திருவிடை மருதூர் தலத்தை அடைந்தார். “தேவி! இந்தத் தலம் மிகவும் அழகானது. அமைதியானது. எனக்கு அதிகம் விருப்பமானது. இதன் அழகை நீ காண்பாயாக” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    உமாதேவியாரும் அந்தத் தலத்தை நன்கு சுற்றிப்பார்த்து, காசிபர் போன்ற முனிவர்கள் தவஞ்செய்தலையும், மற்ற விசேஷங்களையும் கண்டு களிப்புற்றாள். அங்கே தவஞ்செய்யும் முனிவர்கள் தம்முட் பேசிக் கொள்ளும் வினாவிடைகளைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, பார்வதி தேவியோடு ஈஸ்வரனும் ஒரு முகூர்த்த காலம் யாவரும் அறியா வண்ணம் மறைந்திருந்தார்.

    அப்போது அங்கே வந்த அகஸ்திய முனிவரைக் கண்ட தவயோகிகள் அவரை வணங்கி, “தேவரீர் இங்கே எழுந்தருளியிருப்பது நாங்கள் செய்த பாக்கியமே. சுவாமி! யாகம் முதலிய கருமங்களைச் செய்யப் பயனளிப்பது அக்கருமமா? அல்லது ஈஸ்வரனா என்ற சந்தேகம் நெடுநாளாக எங்கள் மனத்தில் உள்ளது தாங்கள் அந்தச் சந்தேகத்தைப் போக்க வேண்டுகிறோம்” என்றனர்.

    அதைக் கேட்ட மலையமுனி “கர்மா தானே பயன் தராது. அதன் பயனைத் தருபவர் ஈஸ்வரனே” என்று விளக்கிக் கூறி முனிவர்களே, அவனருளாலேயே அவனை அடைய வேண்டும் என வேதங்கள் கூறுகின்றன. ஆதலால் நீவிர் அருள்வள்ளலாம் உமாதேவியாரைக் குறித்துத் தவம் செய்து அவள் அருளால் ஈசனைத் தரிசியுங்கள்” என்று கூறினார்.

    இதைக்கேட்ட அன்னை இவர்களுக்குக் காட்சி கொடுத்தல் வேண்டும் என்று இறைவனை வேண்ட, “நாம் இப்போது இவர்களுக்கு வெளிப்படுவது முறையன்று. அகஸ்தியன் கூறியபடியே நடக்கட்டும்” என மொழிந்து உமாதேவியுடன் திருக் கயிலாயம் எழுந்தருளினார். பின்பு அகத்திய முனி கூறியபடி அனைவரும் கலை மகளை நோக்கித் தவம் செய்து வேதாகமங்களின் உண்மைப் பொருள் உணர்ந்து, பின் மலர்மகளான லட்சுமியை நோக்கித் தவம் செய்து, யாகத்துக்குரிய பொருள்கள், தடாகம், மண்டபம், சண்பகச் சோலை, நவமணிக்குவியல், காமதேனு, கற்பகம் போன்றவற்றைப் பெற்றனர். பின்பு முனிவர்களுடன் அகஸ்தியரும் உமாதேவியாரை நினைத்து அந்தச் சண்பகச் சோலையிலிருந்து யாகம் வளர்த்துத் தவம் செய்யத் தொடங்கினார்.

    எப்போதும் உமாதேவியாருடைய திருவடிகளை நினைத்துப் பல நாட்கள் தவம் புரிந்தனர். அம்மையாரின் தரிசனம் கிட்டவில்லை. அகஸ்திய முனிவர் பெரிதும் வருந்தினார். திருவருள் கூட்டினாலன்றி எவ்வித முயற்சியும் பயன் தராதன்றோ! அகஸ்தியர் அம்மையார் அருளாமை குறித்துச் சிவபெருமானை வேண்ட, இறைவன் அகஸ்தியர் பால் கனிந்து உமையைத் தரிசனத்துக்கு அனுப்புகிறார்.

    அம்மையார் வேள்விச்சாலையில் அக்னியில் தோன்றிக் காட்சியளிக்கிறார். முனிவர்கள் அம்பிகை வடிவத்தைத் தரிசித்து ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார்கள். ஆடினர், பாடினர், அன்புக் கோஷம் எழுப்பினர். அவளை ஆசனத்தில் இருத்திப் பூசையாற்றினார். தங்களது வேண்டுகோளை இறைவரையும் தரிசிக்க வேண்டும் என்ற ஆசையை வெளியிட்டார்கள். அம்பிகை முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று அம்முனிவர்கள் போல் தாமும் தவவேடம் மேற்கொண்டார்.

    அம்பிகை பக்தியுடன் காவிரியில் நீராடி, நித்திய கர்மங்களை முடித்து திருவைந்தெழுத்தை முறைப்படி ஓதி, வேண்டிய உபகரணங்களை எல்லாம் சேகரம் செய்து ஐவகை சுத்தியும் செய்து சிவபெருமானை நோக்கி பூஜித்து, பின் இறைவனை தியானித்து மோனநிலையை அடைந்து சிவோக பாவனையில் தவமிருந்தார். இத்திருக்கோலமே மூகாம்பிகை என்று அழைக்கப்படுகிறது. இம்மூர்த்தம் இவ்வாலயத்தில் தனிச்சந்நிதியாக திகழ்கிறது.

    இப்படி நிகழும் காலத்தில், அம்பிகை ஹிருதய கமல மத்தியில் இறைவன் ஜோதிர்மய மகாலிங்கமூர்த்தியாய் அவர்களுக்கு தோன்றினார். அதனின்றும் பிறையுடன் கூடிய முடியும், மான், மழு, அபயம், வரதம் அமைந்த திருக்கரங்களுடன் ஏகநாயகமூர்த்தியாய் எழுந்தருளிக் காட்சி அளித்தார்.

    முனிவர்கள் வணக்கத்துடன் துதி செய்து “நாம் செய்த தவம் பலித்தது” என்று கூறி, ஆனந்தப் பரவசமுற்றனர். இறைவன் அம்பிகையை நோக்கி, “உனது தவம் கண்டு மகிழ்ந்தோம். அகஸ்தியர் போன்ற முனிவர்களுக்கும் காட்சியளித்தோம். இனி யாரும் அறியும்படி நாம் முன்னை வடிவமாகக் கொண்ட ஜோதிமய மகாலிங்கத்தை அநாதியாக உள்ள நம் உருவமாகிய லிங்கத்துடன் ஐக்கியத்து பூஜிக்கிறோம்” என்று கூறி தேவர்கள், வானவர்கள் தத்தம் பணிகளைச் செய்து முடித்து இறைவன் அருகே நிற்க, தாம் உரைத்தருளிய வேதாகம் விதிப்படி மகாலிங்கத்தைப் பூஜிக்கலானார்.

    இதைக் கண்ட தேவி, “பிரபோ! பிரம்மன், விஷ்ணு போன்ற தேவர்கள் அன்றோ தங்களை அர்ச்சிப்பர். தாங்கள் இந்த ஜோதிலிங்கத்தில் எவரைப் பூஜித்தீர்கள்?” என்று வினவ, அதற்கு மகேஸ்வரன், “உமையே! பூசித்தோனும் பூசனையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே. நம்மை நாமே பூஜிப்பதற்கு காரணம்.

    இம்முனிவர்களுக்கு நம்மைப் பூஜிக்கும் முறையை அறிவுறுத்தற்பொருட்டே” என்று கூறி முனிவர்களுக்குச் சிவஞானத்தை அருளி, லிங்கத்தின் பெருமையையும் பூஜை செய்யும் முறையையும் பூஜிப்பவர்கள் அடையும் பயனையும் விவரித்து கூறி உமையுடன் திருக்கயிலாயம் சென்றார்.

    பிறகு தேவர்களும் முனிவர்களும் விஸ்வகர்மாவை அழைத்து ஆலயம் அமைக்கும் முறையைக் கூறி அதன்படி கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம் போன்ற ஆலயக் கட்டிடங்களை எழுப்பினர். இன்னும் இவ்வாலயத்தில் ஐந்தாம் திருவிழா அன்று தம்மைத் தாமே அர்ச்சித்தல் நடைபெறுகிறது.
    ×