என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
Byமாலை மலர்13 Feb 2019 3:16 AM GMT (Updated: 13 Feb 2019 3:16 AM GMT)
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
செய்யாறு டவுன் திருவோத்தூரில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளான கற்பக விருட்ச காமதேனு வாகனத்திலும், 7-ந்தேதி சூரிய பிரபை, இரவில் சந்திர பிரபை வாகனத்திலும், 8-ந்தேதி பூத வாகனத்திலும், 9-ந்தேதி பெரிய நாக வாகனத்திலும், 10-ந் தேதி பகலில் அதிகார நந்தி வாகனத்திலும், இரவில் பெரிய ரிஷப வாகனத்திலும் வேதபுரீஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று முன்தினம் காலை 63 நாயன்மார்கள் வீதி உலாவும், பகலில் சந்திரசேகர வாகனத் தில் சாமி வீதி உலாவும், இரவு அம்மன் தோட்ட உற்சவத் துடன் திருக்கல்யாண வைபவமும் யானை வாகன சேவையும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை சிறப்பு ஆராதனை நடந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறையினர், விழா குழுவினர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். முதல் தேரில் விநாயகரும், 2-வது தேரில் வேதபுரீஸ்வரரும், 3-வது தேரில் பாலகுஜாம்பிகையும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பின்னர் தேர்கள் சன்னதி தெரு, ஆற்றங்கரை தெரு வழியாக சென்று கோவில் வெளிபிரகாரத்தினை சுற்றி வந்து குமரன் தெரு, சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது.
இன்று (புதன்கிழமை) பகலில் சந்திரசேகர சாமி திருவீதி உலாவும், இரவு குதிரை வாகனத்திலும், நாளை நந்தி வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.
15-ந்தேதி பகலில் நடராஜர் உற்சவமும், மாலை தீர்த்த வாரியும், கொடி இறக்குத லுடன் ராவணேஸ்வர திருக் கயிலை சேவை பஞ்ச மூர்த்திகள் புறப் பாடுவுடன் பிரம் மோற்சவ விழா நிறைவடை கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகள் விழா குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் காலை 63 நாயன்மார்கள் வீதி உலாவும், பகலில் சந்திரசேகர வாகனத் தில் சாமி வீதி உலாவும், இரவு அம்மன் தோட்ட உற்சவத் துடன் திருக்கல்யாண வைபவமும் யானை வாகன சேவையும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை சிறப்பு ஆராதனை நடந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறையினர், விழா குழுவினர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். முதல் தேரில் விநாயகரும், 2-வது தேரில் வேதபுரீஸ்வரரும், 3-வது தேரில் பாலகுஜாம்பிகையும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பின்னர் தேர்கள் சன்னதி தெரு, ஆற்றங்கரை தெரு வழியாக சென்று கோவில் வெளிபிரகாரத்தினை சுற்றி வந்து குமரன் தெரு, சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது.
இன்று (புதன்கிழமை) பகலில் சந்திரசேகர சாமி திருவீதி உலாவும், இரவு குதிரை வாகனத்திலும், நாளை நந்தி வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.
15-ந்தேதி பகலில் நடராஜர் உற்சவமும், மாலை தீர்த்த வாரியும், கொடி இறக்குத லுடன் ராவணேஸ்வர திருக் கயிலை சேவை பஞ்ச மூர்த்திகள் புறப் பாடுவுடன் பிரம் மோற்சவ விழா நிறைவடை கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகள் விழா குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X