search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனிக்கு வந்த முதல் காவடி
    X

    பழனிக்கு வந்த முதல் காவடி

    பழனியாண்டவர் கோவிலில் முதல் காவடியை தற்போதும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். மலை உச்சியில் போகர் சமாதி பகுதியில் அந்த காவடி வைக்கப்பட்டுள்ளது.
    பழனியாண்டவர் கோவிலில் முதல் காவடியை தற்போதும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். மலை உச்சியில் போகர் சமாதி பகுதியில் அந்த காவடி வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் எழபெத்தவீடு என்ற ஊரைச் சேர்ந்த ஒரு பக்தர் சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காவடியை சுமந்து வந்தார். மரம் மற்றும் அலுமினியக் கலவையால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த காவடியின் ஒரு பக்கத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகரும், மற்றொரு பக்கத்தில் சித்தி, புத்தி சமேத விநாயகரும் பொறிக்கப்பட்டுள்ளனர். மிகுந்த எடை உள்ள இந்த காவடி பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது.

    சிறப்புமிக்க இந்த காவடியை செலுத்திய எழபெத்த வீடு குடும்பத்தினர் ஆண்டுதோறும் பழனிக்கு காவடி எடுத்து முருகனுக்கு செலுத்துவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாரம்பரியமாக இந்த பழக்கம் இருந்தது. தற்போது அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் பழனிக்கு வரும் போது மறக்காமல் அந்த “முதல்காவடி”க்கு பூஜைகள் செய்துவிட்டு செல்கின்றனர்.

    எழபெத்தவீடு குடும்பத்தினரைத் தொடர்ந்து பழனியாண்டவருக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. நாளடைவில் தமிழர்களும், அதிக அளவில் பழனிக்கு காவடி எடுத்தனர். தற்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பழனிக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் காவடி ஏந்தி செல்கின்றனர். பங்குனி உத்திரம் நாளில் பழனிக்கு வரும் காவடிகளின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரத்தை தாண்டுகிறது.
    Next Story
    ×