search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மணப்பாறை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்
    X

    மணப்பாறை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்

    காளியம்மன் கோவிலில் மார்கழி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ராஜ வீதிகளின் வழியாக சென்று காளியம்மன் கோவிலை அடைந்தனர்.
    மணப்பாறையில், திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மார்கழி திருவிழா நேற்று முன்தினம் இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று காலை பால்குட விழா நடைபெற்றது.

    நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ராஜ வீதிகளின் வழியாக சென்று காளியம்மன் கோவிலை அடைந்தனர். பின்னர், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இன்று(திங்கட்கிழமை) காலை அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுவதல், மாவிளக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    அதைத்தொடர்ந்து அன்னதானமும், மாலை பெண்கள் நடத்தும் கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை கரகம் களைதல் நிகழ்ச்சியும், அதன் பின்னர் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகளும் நடைபெறுகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, கோவில் செயல் அலுவலர் பிரபாகர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×