search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று 4-ம் கால யாகசாலை பூஜை நடந்த போது எடுத்த படம்.
    X
    கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று 4-ம் கால யாகசாலை பூஜை நடந்த போது எடுத்த படம்.

    திருவானைக்காவல் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது

    பஞ்சபூதங்களில் நீர் தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
    பஞ்சபூதங்களில் நீர் தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் முதல் கட்டமாக கடந்த 9-ந்தேதி பரிவார மூர்த்திகள் மற்றும் உப சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    2-வது கட்டமாக இன்று (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதி மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்ட 7 கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

    இதற்கான யாகசாலை பூஜைகள் கோவில் வளாகத்தில் சுந்தர பாண்டியன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் கடந்த 9-ந்தேதி தொடங்கின. நேற்று இரவு 5-ம் கால யாகசாலை பூஜை மற்றும் பூர்ணாஹுதி, தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை மற்றும் அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடக்கிறது.
    Next Story
    ×