search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jambukeswarar temple"

    • பஞ்சபூத ஸ்தலங்கள் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும்.
    • பஞ்சபூத ஸ்தலங்களை ஒவ்வொன்றாக வரிசையாக ஒரே நாளில் பார்த்துவிடலாம்.

    பஞ்ச பூதங்களின் இயக்கம் சரியாக இல்லையென்றால் இவ்வுலகம் மட்டுமல்ல நாமும், நம் உடலுமே இயங்குவது கடினம். அதாவது நம் உடலில் ரோமம், தோல், தசை, எலும்பு, நரம்பு ஆகியவை நிலத்தின் தன்மை உடையவை. ரத்தம், கொழுப்பு, கழிவுநீர் என்பவை நீரின் இயல்பு கொண்டவை.

    அதேவேளை பசி, தாகம், தூக்கம் ஆகியவை நெருப்பின் தன்மை உடையவையாகவும்; அசைவு, சுருக்கம், விரிவு ஆகியவை காற்றின் இயல்பை கொண்டவையாகவும் அறியப்படுகின்றன. வயிறு, இதயம், மூளை என்பவை ஆகாயத்தின் தன்மையை கொண்டவையாகும்.

    இதன் அடிப்படையில் நம் உடலின் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்று சிறப்புற வேண்டும் எனில் கோவில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்வதும் நன்மை பயக்கும்.

    அந்த வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில், ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று நாம் வழிபடலாம்.

    இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன.

    பஞ்சபூத ஸ்தலங்களை ஒவ்வொன்றாக வரிசையாக ஒரே நாளில் பார்த்துவிடலாம். அதற்கு திருச்சியில் இருந்து தொடங்கி திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என்று இறுதியாக ஸ்ரீ காளஹஸ்தியை அடைய வேண்டும்.

    இதற்கு திருச்சியிலிருந்து ஸ்ரீ காளஹஸ்தி வரை மொத்தம் 560 கி.மீ பயணிக்க வேண்டும். எல்லா ஊர்களுக்கும் ரெயில், பேருந்து ஆகிய போக்குவரத்து வசதிகள் சுலபமாக கிடைக்கின்றன.

    அறுபத்துமூவர் திருவீதி உலா ஆகிய முப்பெரும் விழா திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நடைபெற்றது.
    பன்னிரு திருமுறை வார வழிபாட்டு கழகத்தின் 50-வது ஆண்டு விழா, திருமுறை விழா, அறுபத்துமூவர் திருவீதி உலா ஆகிய முப்பெரும் விழா திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

    விழாவை திருவானைக்காவல் உதவி ஆணையர் ஜெயப்பிரியா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இரண்டாம் நாளான நேற்று முன்தினம் காலை ஆன்மார்ந்த சிவபூஜை, சொற்பொழிவரங்கம், மாகேஸ்வர பூஜை, திருமுறை பண்ணிசை, அறுபத்துமூவர் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றன. மூன்றாம் நாளான நேற்று காலை அறுபத்து மூவர் திருநீற்றான் மதில் வலம் வந்தனர்.

    பின்னர் திருமுறைகள் பாராயணம் மற்றும் கூட்டு வழிபாடு நடைபெற்றது. மாலையில் அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அறுபத்துமூவர் நான்காம் பிரகாரத்தில் வீதி உலா வந்து கோவிலை அடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மற்றும் அறுபத்துமூன்று நாயன்மார்களையும் வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா, பன்னிரு திருமுறை வார வழிபாட்டு கழகத்தினர் செய்திருந்தனர்.

    திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட புதிய கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது.
    திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்த திருவானைக்காவலில் பிரசித்தி பெற்ற ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னரும் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில் அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி எதிரே பல ஆண்டுகளாக தாமிர தகடுடன் கூடிய கொடிமரம் இருந்தது. அதற்கு மாற்றாக தங்க முலாம் பூசப்பட்ட புதிய கொடிமரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கொடிமரத்தில் முலாம் பூசப்பட்ட தங்க தகட்டை பதிக்கும் பணி நகை சரிபார்ப்பு உதவி ஆணையர் சுரேஷ் முன்னிலையில், கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா மேற்பார்வையில் நடை பெற்றது.

    26 அடி உயரமுள்ள இந்த கொடிமரத்தில் 140 கிலோ செம்புத்தகடு, 100 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு ரூ.5 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டது. கொடிமரத்தின் கிழக்கில் அகிலாண்டேஸ்வரி உருவமும், மேற்கில் விநாயகர், வடக்கில் துர்க்கை, தெற்கில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் உருவமும் பதிக்கப்பட்டுள்ளது.

    கொடிமரத்தின் பிரம்மபாதம் 5 அடியும், விஷ்ணு பாதம் 3 அடியும் அழகிய வேலைப்பாடுகளுடன் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தின் நடுவே வரகுதானியம் நிரப்பப்பட்டு, பொருத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்்கு கொடியேற்றம் கடந்த 31-ந் தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று முன்தினம் இரவு தேரோட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெருவடச்சானில் வீதி உலா வந்தனர்.



    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகர லக்னத்தில் அதிகாலை 3 மணி அளவில் உற்சவர் ஜம்புகேஸ்வரர் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர் சிறிய தேரோட்டம் தேரோடும் வீதிகளில் வந்து நிலையை அடைந்தது.

    பின்னர் காலை 6.20 மணிக்கு ஜம்புகேஸ்வரர் சுவாமி தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய நான்கு பிரகாரங்களில் சுற்றிவந்து தேர் காலை 8.15 மணிக்கு மேல் உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்தது. பின்னர் காலை 8.30 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அம்மன் தேர் காலை 10.10 மணிக்கு சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அம்மன் தேருக்கு பின்னால் சண்டிகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலித்தார்.

    மீண்டும் பக்தர்களால் சுவாமி தேர் காலை 10.15 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்பட்டு காலை 10.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அம்மன் தேர் 10.45 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தின்போது கோவில் யானை அகிலா தேருக்கு முன் செல்ல மேளதாளம், சங்கொலி முழங்க வானவேடிக்கையுடன் சிவ, சிவ, ஓம் சக்தி என்ற பக்தி கோஷத்திற்கு நடுவே உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பஞ்ச பூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா அடுத்த மாதம்(ஏப்ரல்) 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    முன்னதாக சுவாமி, அம்மன், விநாயகர், சோமாஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காலை 10 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின்னர், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து காலை 10.30 மணிக்கு மேஷ லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி வருகிற 31-ந் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 2-ம் நாள் சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும், 3-ம் நாள் பூத மற்றும் காமதேனு வாகனத்திலும், 4-ம் நாள் கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 5-ம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் அடுத்த மாதம் 5-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ந்தேதி நண்பகலில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சொக்கர் உற்சவம், மவுனோத்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. மேலும் விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் புறப்பாடு நடக்கிறது. ஏப்ரல் 19-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. இதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்்தில் வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 21-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி, பல வருடங்கள் இடைவெளிக்கு பின்னர் இன்று நடைபெற உள்ளது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் தை மாதம் மங்கள பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்படுவது வழக்கம். தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் என்ற வகையில் ரெங்கநாதர் சீர் வழங்குவதாக ஐதீகமாகும். சீர் வரிசை பெறுவதற்காக சமயபுரம் மாரியம்மன் கொள்ளிடம் ஆற்றுக்கு வருவதும் நடைமுறையில் உள்ளது.

    இதேபோல் ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கும் பல ஆண்டுகளுக்கு முன் சீர்வரிசை வழங்கப்பட்டதாகவும், பின்னர் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி திருவானைக்காவல் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு எழுதப்பட்ட கடிதங்களின் அடிப்படையில் பல வருடங்கள் இடைவெளிக்கு பின்னர், மீண்டும் இந்த சம்பிரதாய நிகழ்ச்சி இன்று(சனிக்கிழமை) தொடங்குகிறது.

    இன்று இரவு 7 மணி அளவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிக்கு பட்டாடைகள் உள்ளிட்ட வஸ்திரங்கள், மாலைகள் மற்றும் பச்சரிசி, பாசிப்பயறு உள்ளிட்ட நைவேத்திய பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட இருப்பதாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
    திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் 7 கோபுரங்கள், மூலவர் சன்னதிகளுக்கு இன்று 2-ம் கட்ட கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    பஞ்ச பூதங்களில் நீர் ஸ்தலமாக திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் போற்றப்படுகிறது. மேலும் சைவத்திருத்தலங்களில் முக்கியமான திருத்தலம் இதுவாகும்.

    இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்ததையடுத்து 2 கட்டமாக கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி முதல் கட்ட கும்பாபிஷேகம் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. இதில் பரிவார தெய்வங்கள் மற்றும் உபசன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    பெரிய கோபுரங்கள், மூலவர், அம்பாள் சன்னதி மற்றும் விமானங்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சுந்தர பாண்டியன் கோபுரம் அருகே உள்ள யாகசாலை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். அப்போது அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

    மூலவர் ஜம்புகேஸ்வரர் கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்ட காட்சி.

    பின்னர் 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதி மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்ட 7 கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் வளர்மதி மற்றும் கலெக்டர் ராசாமணி, திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூர் தம்பிரான் சுவாமிகள், தர்மாபுரம் ஆதீனம் மாசிலாமணி சுவாமிகள், வேளாங்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகா தேசிக சுவாமிகள்,

    புவனேஸ்வரி பீடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், திரு வானைக்காவல் கோவில் தக்கார் ராணி, நிர்வாக அதிகாரியும், உதவி ஆணையருமான ஜெயப்பிரியா, ரெங்கவிலால் ரெங்கநாதன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள்.

    அப்போது பக்தர்கள் வல்ல சிவனே போற்றி, சிவ சிவ போற்றி என பக்தி கோ‌ஷமிட்டனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

    முன்னதாக நேற்றிரவு திருவானைக்காவல் கோவிலில் நடைபெற்ற யாக சாலை பூஜையில் பங்கேற்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் வந்தார். யாகசாலை மண்டபத்துக்கு வந்த அவருக்கு மேள, தாளம் முழங்க பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

    அதன் பிறகு யாகசாலை பூஜையில் கவர்னர் மற்றும் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பூஜை முடிந்ததும், கவர்னருக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி திருவானைக்காவல் கோவிலில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    பஞ்சபூதங்களில் நீர் தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
    பஞ்சபூதங்களில் நீர் தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் முதல் கட்டமாக கடந்த 9-ந்தேதி பரிவார மூர்த்திகள் மற்றும் உப சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    2-வது கட்டமாக இன்று (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதி மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்ட 7 கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

    இதற்கான யாகசாலை பூஜைகள் கோவில் வளாகத்தில் சுந்தர பாண்டியன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் கடந்த 9-ந்தேதி தொடங்கின. நேற்று இரவு 5-ம் கால யாகசாலை பூஜை மற்றும் பூர்ணாஹுதி, தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை மற்றும் அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடக்கிறது.
    திருவானைக்காவலில் இரண்டாம் கட்டமாக ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மூலவர் சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
    பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்கும் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் முதல் கட்டமாக பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இரண்டாம் கட்டமாக ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மூலவர் சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நாளை (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்தையொட்டி மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதி விமான தங்க கலசங்கள் புதுப்பொலிவு பெற்று உள்ளன. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.40 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வருகிறார்.

    சுற்றுலா மாளிகையில் தங்கும் அவர் இன்று இரவே ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 48 பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலாகும். இக்கோவிலில் கடைசியாக கடந்த 2000-வது ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இந்து கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகமாகும். ஆனால் 12 ஆண்டுகளை தாண்டியும் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்ததால் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடந்து வந்தன.

    திருப்பணி வேலைகள் முடிவடைந்து பரிவார மூர்த்தி சன்னதிகளில் டிசம்பர் 9-ந்தேதியும், மூலவர் சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் டிசம்பர் 12-ந்தேதியும் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் படி முதல் கட்ட கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. நேற்று காலை 6 மணியில் இருந்தே கோவில் வளாகத்தில் நவராத்திரி மண்டபம் அருகில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில் யாக பூஜைகள், ஹோமம் நடந்தது.

    இந்த பூஜையில் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் திருவிடை மருதூர் கட்டளை சாமிநாத தம்பிரான் சுவாமிகள், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து காலை 7 மணி அளவில் யாக சாலையில் இருந்து அர்ச்சகர்கள் புனித நீர் அடங்கிய குடங்களை தலையில் சுமந்து பரிவார மூர்த்தி சன்னதிகளை நோக்கி சென்றனர். அலங்கரிக்கப்பட்ட கோவில் யானை அகிலா முன்செல்ல சங்கராச்சாரியார், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள் மேளதாளம் உள்ளிட்ட பஞ்ச வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். ராஜகோபுரம் விநாயகர் சன்னதி அருகில் முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.



    அர்ச்சகர்கள் ஆதி அகிலாண்டேஸ்வரி, ஆதி ஜம்புகேஸ்வரர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, மீனாட்சி, சுந்தரேஸ்வரர், சங்கமேஸ்வரர், சங்கமேஸ்வரி, குபேரலிங்கம், பிரசன்ன விநாயகர், ஆஞ்சநேயர், பள்ளியறை, நந்தி உள்ளிட்ட 48 சன்னதி விமானங்களுக்கும் அர்ச்சகர்கள் புனித நீர் குடங்கள், மலர் தட்டுகள் எடுத்து சென்று தயார் நிலையில் நின்று கொண்டிருந்தனர். சரியாக 7.55 மணிக்கு சங்கு ஊதப்பட்டது. சங்கொலி எழுப்பப்பட்டதும் அர்ச்சகர்கள் 48 சன்னதி கலசங்களிலும் புனித நீர் ஊற்றினார்கள். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பின்னர் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கில் பக்தி பரவசத்துடன் நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மூலஸ்தான சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம், சுந்தரபாண்டியன் கோபுரம் உள்பட 7 கோபுர விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை மண்டபம் சுந்தரபாண்டியன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு முதல் கால யாகசாலை பூஜை நேற்று மாலை தொடங்கியது. இன்று (திங்கட்கிழமை) காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை நான்காம் கால யாகசாலை பூஜையும், மாலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. 12-ந்தேதி (புதன்கிழமை) காலை 6.30க்கு ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கும், 7 மணிக்கு மூலஸ்தான சன்னதிகளுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் செய்து இருந்தனர். திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கும்பாபிஷேகத்தையொட்டி 12-ந்தேதி வரை கோவில் வளாகத்தில் தினமும் பரத நாட்டியம் உள்பட கலை நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரிகள் நடைபெறுகிறது. 
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெற இருப்பதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
    பஞ்ச பூதங்களில் நீர் தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் இம்மாதம் 9 மற்றும் 12-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் நவராத்திரி மண்டபம், சுந்தர பாண்டியன் கோபுரம் அருகில் ஆகிய இடங்களில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பூர்வாங்க பூஜைகள் நடந்தன.

    நேற்று முன்தினம் மாலை காவிரி ஆற்றில் இருந்து மேளதாளம் முழங்க தங்கம், வெள்ளி, பித்தளை குடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டது. பின்னர், 5-ம் பிரகாரம் விநாயகர் சன்னதி மற்றும் இரணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    நேற்று காலை 8.30 மணிக்கு யாகசாலையில் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், யஜமானர்கள் சங்கல்பம், அனுக்ஞை, நவக்கிரகஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. மாலை 5.30 மணிக்கு பரிவார மூர்த்திகள் யாகசாலை பிரவேசம், அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 8 மணிக்கு மேல் பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (சனிக்கிழமை) 8.30 மணிக்கு பரிவார யாகசாலை பூஜை ஹோமமும், காலை 11.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனையும், மாலை 5.30 மணி மற்றும் இரவு 8.30 மணிக்கு யாகசாலை, ஹோமம் ஜபம் பாராயணமும் நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடக்கிறது. காலை 7 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் (புனித நீர் குடங்கள்) புறப்பாடு நடக்கிறது. இதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் அனைத்து பரிவார விமானங்கள், பரிவார மூர்த்திகள், உற்சவ மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அப்போது காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் அர்ச்சகர்கள் பரிவார மூர்த்தி சன்னதி விமானங்கள் மற்றும் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றுவார்கள். இதனை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    காலை 9 மணிக்கு மகாலட்சுமி தீபாராதனையும், காலை 10.30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனையும், மாலை 4 மணிக்கு பிரதான மூர்த்திகள் யாகசாலை பிரவேசத்தை தொடர்ந்து முதல் கால யாகபூஜை தொடங்குகிறது. 10-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5.30 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.

    12-ந்தேதி (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மூலஸ்தானங்கள் மற்றும் ராஜகோபுர விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் வளாகத்தில் இன்று முதல் 12-ந்தேதி வரை காலை மற்றும் மாலை நேரங்களில் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. 
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் 9 மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெற இருப்பதையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று தொடங்குகிறது. புனித நீர் ஊர்வலத்தில் சங்கராச்சாரியார் பங்கேற்றார்.
    பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலாகும். இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 9 மற்றும் 12-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள் ளது. 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணியில் இருந்து 8.15 மணிக்குள் பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிஷேகமும், 12-ந்தேதி (புதன்கிழமை) காலை 6.30 மணியில் இருந்து 7.15ணிக்குள் ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. 2 கட்ட கும்பாபிஷேகங்களும் காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்தையொட்டி யாக குண்டங்கள் கோவில் வளாகத்தில் நவராத்திரி மண்டபம், சுந்தரபாண்டியன் கோபுரம் ஆகிய 2 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு பரிவார மூர்த்திகள் யாகசாலை பிரவேசமும், அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரவு 8.15 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறும்.

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலைக்கு புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்துக்கு முன்பாக காஞ்சி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமியை யானைகள் புடை சூழ அழைத்து வந்த போது எடுத்த படம்.

    இன்று யாகசாலை பூஜைகள் தொடங்குவதையொட்டி நேற்று காலை காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாம்பழச்சாலை பழைய காவிரி படித்துறையில் இருந்து புறப்பட்ட புனிதநீர் ஊர்வலத்தை காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்து பக்தர்களுடன் நடந்து சென்றார்.

    ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட 4 யானைகள் வந்தன. அதில் ஒரு யானையின் மீது அமர்ந்திருந்த அர்ச்சகர் தங்க குடத்தில் புனித நீர் எடுத்து சென்றார். மேலும் பல பக்தர்கள் வெள்ளி, பித்தளை குடங்களில் புனித நீரை சுமந்து சென்றனர். ஊர்வலத்தின் முன்பகுதியில் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், ஒட்டகங்களும் சென்றன. மேளதாளம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க புனிதநீர் ஊர்வலம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலை அடைந்தது.

    இன்று யாகசாலை பூஜை தொடங்குவதையொட்டி நேற்று மாலை 5-ம் பிரகாரம் ஈசானிய விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் காவல் தெய்வமான கும்பகோணத்தான் சாலையில் உள்ள இரணியம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 
    ×