search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ekambaranathar Temple"

    • பஞ்சபூத ஸ்தலங்கள் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும்.
    • பஞ்சபூத ஸ்தலங்களை ஒவ்வொன்றாக வரிசையாக ஒரே நாளில் பார்த்துவிடலாம்.

    பஞ்ச பூதங்களின் இயக்கம் சரியாக இல்லையென்றால் இவ்வுலகம் மட்டுமல்ல நாமும், நம் உடலுமே இயங்குவது கடினம். அதாவது நம் உடலில் ரோமம், தோல், தசை, எலும்பு, நரம்பு ஆகியவை நிலத்தின் தன்மை உடையவை. ரத்தம், கொழுப்பு, கழிவுநீர் என்பவை நீரின் இயல்பு கொண்டவை.

    அதேவேளை பசி, தாகம், தூக்கம் ஆகியவை நெருப்பின் தன்மை உடையவையாகவும்; அசைவு, சுருக்கம், விரிவு ஆகியவை காற்றின் இயல்பை கொண்டவையாகவும் அறியப்படுகின்றன. வயிறு, இதயம், மூளை என்பவை ஆகாயத்தின் தன்மையை கொண்டவையாகும்.

    இதன் அடிப்படையில் நம் உடலின் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்று சிறப்புற வேண்டும் எனில் கோவில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்வதும் நன்மை பயக்கும்.

    அந்த வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில், ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று நாம் வழிபடலாம்.

    இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன.

    பஞ்சபூத ஸ்தலங்களை ஒவ்வொன்றாக வரிசையாக ஒரே நாளில் பார்த்துவிடலாம். அதற்கு திருச்சியில் இருந்து தொடங்கி திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என்று இறுதியாக ஸ்ரீ காளஹஸ்தியை அடைய வேண்டும்.

    இதற்கு திருச்சியிலிருந்து ஸ்ரீ காளஹஸ்தி வரை மொத்தம் 560 கி.மீ பயணிக்க வேண்டும். எல்லா ஊர்களுக்கும் ரெயில், பேருந்து ஆகிய போக்குவரத்து வசதிகள் சுலபமாக கிடைக்கின்றன.

    காஞ்சி ஏகாம்பரநாதர் சிலை முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் கோவில் அதிகாரி வீரசண்முகமணி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
    திருச்சி:

    காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமசுந்தரர் சிலை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழாவின் போது சாமி வீதியுலா நடைபெற்று வந்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு இந்த சிலை சேதம் அடைந்ததால அறநிலையத்துறை மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய சிலை செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது.

    இதுகுறித்து அண்ணாமலை என்பவர் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததோடு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்திலும் புகார் செய்தார். இதை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி சிலை முறைகேடு தொடர்பாக அப்போது தமிழக அரசின் தலைமை ஸ்தபதியாக இருந்த முத்தையா, சிலையை செய்த மாசிலாமணி, கோவில் செயல் அலுவலர் முருகேசன், ஆகியோர் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    அதன் பிறகு இந்த வழக்கில் எந்த மேல் நடவடிக்கையும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் சிலை தொடர்பான வழக்குகள் தற்போது போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் மூலம் மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஏகாம்பரநாதர் கோவில் சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக அப்போது அறநிலையத்துறை ஆணையராக இருந்த வீரசண்முகமணியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

    இந்த ஆண்டு ஏகாம்பநாதர் கோவில் உற்சவ விழா நடைபெற்ற அதே தினத்தில் சிலை முறைகேடு தொடர்பாக முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கைதான வீரசண்முகமணி கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று இரவோடு இரவாக திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிறையில் அடைக்கப்பட்டார். வருகிற 29-ந்தேதி வரை அவரை சிறை காவலில் வைக்க கும்பகோணம் கோர்ட்டு நீதிபதி அய்யப்பன் பிள்ளை உத்தரவிட்டுள்ளார்.

    ×