search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நாளை ஏடு வாசிப்பு திருவிழா
    X

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நாளை ஏடு வாசிப்பு திருவிழா

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஏடு வா சிப்பு திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.
    சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் அகிலத்திரட்டு நூல் மூலம் கூறிய கருத்துக்களை திருஏடாக வாசிப்பது வழக்கம். இந்த ஆண்டு ஏடு வாசிப்பு திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.

    நாளை அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலை 4 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை, 5 மணிக்கு ஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. ஏடு வாசிப்பு நிகழ்ச்சிக்கு தலைமைப்பதி நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்து தொடங்கி வைக்கிறார். இரவு 8 மணிக்கு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடை, மதியம் உச்சி படிப்பும், மாலை ஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவின்15-ம் நாளான அடுத்த மாதம்(டிசம்பர்) 14-ந் தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு, மாலை அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து வைகுண்டசாமிக்கு பக்தர்கள் திருக்கல்யாண சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி, திருக்கல்யாண திருஏடு வாசிப்பு முடிவில் இனிமம் வழங்கும் நிகழ்ச்சியும், 16-ந் தேதி ஏடு வாசிப்பு, அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.

    Next Story
    ×