search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்பு வாய்ந்த துளசி திருமணம்
    X

    சிறப்பு வாய்ந்த துளசி திருமணம்

    தீபாவளிக்கு மறுநாள் பிரதமையில் தொடங்கி, துவாதசி முடிய - 12 தினங்கள் துளசித் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த திருமணத்தை பார்ப்பதற்கு பித்ருக்களும் கூட வருவார்களாம்.
    பாற்கடலில் இருந்து எழுந்த துளசி உன்னதப் பொருட்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்த ஒப்புயர்வற்ற துளசியைப் பார்த்த மாத்திரத்திலேயே நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும். துளசியின் மென்மையான ஸ்பரிசம் நம்மைத் தூய்மையாக்கும். துளசியைப் போற்றித் துதிப்பதால்-நமது நோய்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கி விடும்.

    துளசி தீர்த்தத்தைத் தெளித்து கொண்டால் - மரணபயம் நீங்கும். துளசியை வீட்டில் வளர்த்து வந்தால் கண்டிப்பாக மோட்சம் கிடைக்கும். தினந்தோறும் துளசியைப் பக்தியுடன் வணங்கிப் பூஜித்தால் - சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட துளசி - கண்ணனை மணந்த தெய்வப்பெண்.

    தீபாவளிக்கு மறுநாள் பிரதமையில் தொடங்கி, துவாதசி முடிய - 12 தினங்கள் துளசித் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த திருமணத்தை பார்ப்பதற்கு பித்ருக்களும் கூட வருவார்களாம்.

    தெற்கு கர்நாடகாவில் எல்லா வீடுகளிலும் துளசித் திருமணம் நடைபெறும். வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடுவார்கள். வீட்டின் நடுவில் திருமணப்பந்தல் மாதிரி பந்தல் போட்டு, அதன் கீழ் துளசி மாடத்தை அமைப்பார்கள். மாலை வேளையில் சாளக்கிராம வடிவத்தில் உள்ள கிருஷ்ணரை - பீடத்துடன் தூக்கி வந்து துளசி மாடத்தின் அருகே வைப்பார்கள்.

    சாளக்கிராமத்தை வைத்தவுடன் முதலில் கிருஷ்ணருக்குத் தனியாகப் பூஜை நடைபெறும். பின் சாளக் கிராமத்திற்கும், துளசிக்கும் பூஜை செய்து திருமணத்தை நடத்தி வைப்பார்கள். இடையே நாம சங்கீர்த்தனங்கள் நடைபெறும். கண்ணனின் லீலைகளையெல்லாம் மனம் உருகப் பாடியும், நடனமாடியும், மகிழ்ந்து கொண்டாடி - திருமண நாளை இனிதாக முடிப்பார்கள்.

    Next Story
    ×