search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெரிய கோவில் தேரில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்று தீபாராதனை காண்பித்தபோது எடுத்த படம்.
    X
    பெரிய கோவில் தேரில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்று தீபாராதனை காண்பித்தபோது எடுத்த படம்.

    தஞ்சை பெரிய கோவில் தேருக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

    தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் வருகிற 26-ந் தேதி(வியாழக் கிழமை) நடக்கிறது. இதையொட்டி தேருக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    பிரசித்தி பெற்ற தஞ்சை கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 26-ந் தேதி(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு மேல் பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைவார்கள்.

    அங்கு தியாகராஜர்- கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அதைத்தொடர்ந்து காலை 5.40 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 வீதிகளில் தேர் வலம் வரும்.

    தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தஞ்சை மேல வீதியில் உள்ள தேர்நிலையில் பந்தக்கால் முகூர்த்தம் நேற்று காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகம், பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் ரெங்க ராஜன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×