என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்21 Feb 2018 7:55 AM GMT (Updated: 21 Feb 2018 7:55 AM GMT)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் சிறப்பு வாய்ந்த முக்கிய திருவிழாவான மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடிப்பட்டம் ஊர்வலமாக ஒன்பது சந்திகளிலும் வலம் வந்து, மீண்டும் கோவிலை சேர்ந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை 5.35 மணிக்கு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் செந்தில் ராஜாராம் பட்டர் கொடியேற்றினார்.
தொடர்ந்து கொடிமரம் தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் கொடிமர பீடத்துக்கு எண்ணெய், தைலம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், சந்தனம், விபூதி போன்ற திரவியங்களாலும், பூஜையில் கும்பத்தில் வைக்கப்பட்டு இருந்த புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமர பீடம் வண்ண மலர்களாலும், மாவிலைகளாலும், பட்டு ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்டது.
தொடர்ந்து காலை 6.40 மணிக்கு வேதமந்திரம் முழங்க, ‘அரோகரா‘ கோஷத்துடன் கொடிமரத்துக்கு சோடஷ தீபாராதனை நடந்தது. பின்னர் கட்டியம் கூறப்பட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. நான்குவகை வேதங்கள் பாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலையில் அப்பர் சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வீதிகளில் உழவாரப்பணி செய்து கோவிலை சேர்ந்தார். இரவில் பெலிநாயகர் அஸ்திர தேவருடன் யானைத்தந்த பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு, ஒன்பது சந்திகளிலும் உலா வந்து, மீண்டும் கோவிலை சேர்ந்தார். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
2-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) காலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லக்கிலும், மாலையில் சுவாமி சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடிப்பட்டம் ஊர்வலமாக ஒன்பது சந்திகளிலும் வலம் வந்து, மீண்டும் கோவிலை சேர்ந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை 5.35 மணிக்கு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் செந்தில் ராஜாராம் பட்டர் கொடியேற்றினார்.
தொடர்ந்து கொடிமரம் தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் கொடிமர பீடத்துக்கு எண்ணெய், தைலம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், சந்தனம், விபூதி போன்ற திரவியங்களாலும், பூஜையில் கும்பத்தில் வைக்கப்பட்டு இருந்த புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமர பீடம் வண்ண மலர்களாலும், மாவிலைகளாலும், பட்டு ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்டது.
தொடர்ந்து காலை 6.40 மணிக்கு வேதமந்திரம் முழங்க, ‘அரோகரா‘ கோஷத்துடன் கொடிமரத்துக்கு சோடஷ தீபாராதனை நடந்தது. பின்னர் கட்டியம் கூறப்பட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. நான்குவகை வேதங்கள் பாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலையில் அப்பர் சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வீதிகளில் உழவாரப்பணி செய்து கோவிலை சேர்ந்தார். இரவில் பெலிநாயகர் அஸ்திர தேவருடன் யானைத்தந்த பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு, ஒன்பது சந்திகளிலும் உலா வந்து, மீண்டும் கோவிலை சேர்ந்தார். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
2-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) காலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லக்கிலும், மாலையில் சுவாமி சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X