என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா: குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரில் வீதிஉலா
Byமாலை மலர்18 Aug 2017 3:22 AM GMT (Updated: 18 Aug 2017 3:22 AM GMT)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
6-ம் திருநாளான நேற்று மாலையில் கீழரத வீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான்- வள்ளி அம்பாளுக்கும், ஜெயந்திநாதருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சுவாமி- அம்பாள் மேல கோவிலுக்கு எழுந்தருளினர். பின்னர் இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம் அம்பாலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
6-ம் திருநாளான நேற்று மாலையில் கீழரத வீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான்- வள்ளி அம்பாளுக்கும், ஜெயந்திநாதருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சுவாமி- அம்பாள் மேல கோவிலுக்கு எழுந்தருளினர். பின்னர் இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம் அம்பாலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X