என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பனவடலிசத்திரம் அருகே அக்னி மாலையம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
Byமாலை மலர்27 July 2017 3:27 AM GMT (Updated: 27 July 2017 3:27 AM GMT)
பனவடலிசத்திரம் அருகே உள்ள வடக்கு மாவிலியூத்து செண்பகவிநாயகர் அக்னி மாலையம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
பனவடலிசத்திரம் அருகே உள்ள வடக்கு மாவிலியூத்து செண்பகவிநாயகர் அக்னி மாலையம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெறும். விழாவையொட்டி பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
விழாவையொட்டி அக்னி மாலையம்மனுக்கு குற்றால தீர்த்தம் எடுத்தல், பால்குடம் எடுத்தல், அம்மனுக்கு சந்தன அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நெருப்பு குண்டம் அமைக்கப்பட்டு அக்னி வளர்க்கப்பட்டது. இதில் 2 சிறுமிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
தொடர்ந்து 3 மணி நேரம் பூக்குழி திருவிழா நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்கள் அருள்வாக்கு கேட்டல், பொங்கலிடுதல், மாவிளக்கு எடுத்தல், பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துதல், கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற்றது. இக்கோவில் பூக்குழி திருவிழாவில், எரிகிற நெருப்பில் பக்தர்கள் இறங்கி செல்வது மெயிர் சிலிர்க்க வைப்பதாகும்.
விழாவையொட்டி அக்னி மாலையம்மனுக்கு குற்றால தீர்த்தம் எடுத்தல், பால்குடம் எடுத்தல், அம்மனுக்கு சந்தன அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நெருப்பு குண்டம் அமைக்கப்பட்டு அக்னி வளர்க்கப்பட்டது. இதில் 2 சிறுமிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
தொடர்ந்து 3 மணி நேரம் பூக்குழி திருவிழா நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்கள் அருள்வாக்கு கேட்டல், பொங்கலிடுதல், மாவிளக்கு எடுத்தல், பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துதல், கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற்றது. இக்கோவில் பூக்குழி திருவிழாவில், எரிகிற நெருப்பில் பக்தர்கள் இறங்கி செல்வது மெயிர் சிலிர்க்க வைப்பதாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X