search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எண்ணங்களை நிறைவேற்றும் முருகன் மந்திரம்
    X

    எண்ணங்களை நிறைவேற்றும் முருகன் மந்திரம்

    முருகப்பெருமானை, கிருத்திகை நட்சத்திர தினத்தன்று அவருக்கு உகந்த இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.
    மந்திரம்:
     
    “ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
    மஹாதபாயை தீமஹி|
    தந்நோ க்ருத்திக: ப்ரசோதயாத்|”
     
    இம்மந்திரத்தை கிருத்திகை நட்சத்திரத்தன்று காலையிலோ அல்லது மாலையிலோ, முருகன் கோவிலுக்கு சென்று முருகனுக்கு தீபாரதனை காட்டும் சமயத்தில் இம்மந்திரத்தை 9 அல்லது 27 எண்ணிக்கையில் கூறி வழிபட்டு, அந்த கோவிலில் 9 முறை பிரதிட்சணம் வரவேண்டும். இப்படி ஒவ்வொரு கிருத்திகை நட்சத்திரத்தன்றும் செய்து வந்தால், அந்த முருகப்பெருமானின் அருள் நமக்கு கிடைத்து, நம் யோகங்களையும் பெற்று நமது எதிர்கால வாழ்வு சிறக்கும்.
     
    கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும். மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும்.
     
    கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள். அது போல ஆடி கிருத்திகைக்கும் மிகுந்த சிறப்பு உண்டு. ஆடி கிருத்திகை தினத்தன்று ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியது எல்லாம் கிடைக்கும்.
    Next Story
    ×