search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சந்திராஷ்டம பாதிப்புகளை நீக்கும் சந்திர பகவான் துதி
    X

    சந்திராஷ்டம பாதிப்புகளை நீக்கும் சந்திர பகவான் துதி

    கீழே கொடுக்கப்பட்டுள்ள துதியை பௌர்ணமி திதியன்றும், திங்கட்கிழமைகளிலும் மற்றும் சந்திராஷ்டம தினங்களிலும் பாராயணம் செய்து வந்தால் சந்திர தோஷங்கள் நீங்கும்.
    ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
    ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம்
    தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும்
    ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம்.

    பொதுப்பொருள்:

    வெண்மையான வஸ்திரம் தரித்தவரும், சிறந்த வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட  சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணத்தையும்,  ஸ்ரீவத்ஸம் என்ற முத்து மாலையையும் தரித்தவருமான சந்திர பகவானை நமஸ்கரிக்கிறேன்.  

    - இத்துதியை பௌர்ணமி திதியன்றும், திங்கட்கிழமைகளிலும் மற்றும் சந்திராஷ்டம தினங்களிலும் பாராயணம் செய்து வந்தால் சந்திர தோஷங்கள் நீங்கும்.
    Next Story
    ×