search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எடுத்த காரியங்கள் தடையின்றி நிறைவேற சாமுண்டி காயத்ரி மந்திரம்
    X

    எடுத்த காரியங்கள் தடையின்றி நிறைவேற சாமுண்டி காயத்ரி மந்திரம்

    சாமுண்டிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து, சாமுண்டியை வழிபட்டால், எதிரிகள் பயம் விலகும். எடுத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய பத்திரகாளியே, தன்னுடைய கோரமுகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனாள் என்று கூறப்படுகிறது. இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அசுரனை அழித்தவள்.

    பதினாறு கைகள், மூன்று கண்கள் கொண்டவள். தனது 16 கரங்களிலும் விதவிதமான ஆயுதங்களை தாங்கியிருப்பவள். செந்நிற மேனியைக் கொண்ட இவள், யானையின் தோலை ஆடையாக அணிந்தவள். சப்த கன்னியர்களில் முதலில் தோன்றியவள் சாமுண்டி. ஏழு பேரில் சர்வ சக்தியையும் பெற்றவள் இந்த அன்னை.



    ‘ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
    சூலஹஸ்தாயை தீமஹி
    தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்’

    என்ற காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து, சாமுண்டியை வழிபட்டால், எதிரிகள் பயம் விலகும். வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகள் வந்து சேரும். எடுத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

    Next Story
    ×