என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தீரன் அதிகாரம் ஒன்று
Byமாலை மலர்11 Nov 2017 1:01 PM GMT (Updated: 11 Nov 2017 1:01 PM GMT)
எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் முன்னோட்டம்.
கார்த்தி நடிப்பில் வருகிற நவம்பர் 17-ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’.
இதில் கார்த்தி ஜோடியாக ரகுல் பிரீத்திசிங் நடிக்கிறார்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறு கிறார்....
“இது போலீஸ் கதை. என்றாலும் வழக்கமான போலீஸ் கதை அல்ல. யதார்த்தமாக ஒரு போலீஸ் அதிகாரி சந்திக்கும் பிரச்சினைகளை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறோம். இந்த போலீஸ் 10 பேரை அடித்து பறக்கவிட மாட்டார்.
கார்த்தி சக மனிதரைப் போல் வாழும் ஒரு போலீஸ். தீரன் என்கிற திருமாறன் என்பது அவருடைய பெயர். அவருக்கு காதல், கல்யாணம், வேலை தொடர்பான வாழ்க்கை இருக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்ததுதான் அதிகாரம் ஒன்று.
கார்த்தி ஒரு விசாரணைக்காக வட மாநிலங்களுக்கு செல்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பிரச்சினையை சந்திக்கிறார். இந்த படத்தில் 4 வட மாநிலத்தைச் சேர்ந்த வில்லன்கள் நடித்திருக்கிறார்கள். மும்பையில் ஜாமீன்கா, மராட்டியத்தில் கிஷோர்கதம், போஜ்புரியைச் சேர்ந்த ஜோகித் பதக், குஜராத்தைச் சேர்ந்த அபிமான் சிங் ஆகியோர் கார்த்தியுடன் மோதும் வில்லன்கள்.
1995 முதல் 2005 வரை 10 வருடங்களில் நடக்கும் கதை. செய்திதாள்களில் படிக்கும் குற்ற செய்திகளில் ஒன்றை படமாக்கி இருக்கிறோம்” என்றார்.
இதில் கார்த்தி ஜோடியாக ரகுல் பிரீத்திசிங் நடிக்கிறார்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறு கிறார்....
“இது போலீஸ் கதை. என்றாலும் வழக்கமான போலீஸ் கதை அல்ல. யதார்த்தமாக ஒரு போலீஸ் அதிகாரி சந்திக்கும் பிரச்சினைகளை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறோம். இந்த போலீஸ் 10 பேரை அடித்து பறக்கவிட மாட்டார்.
கார்த்தி சக மனிதரைப் போல் வாழும் ஒரு போலீஸ். தீரன் என்கிற திருமாறன் என்பது அவருடைய பெயர். அவருக்கு காதல், கல்யாணம், வேலை தொடர்பான வாழ்க்கை இருக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்ததுதான் அதிகாரம் ஒன்று.
கார்த்தி ஒரு விசாரணைக்காக வட மாநிலங்களுக்கு செல்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பிரச்சினையை சந்திக்கிறார். இந்த படத்தில் 4 வட மாநிலத்தைச் சேர்ந்த வில்லன்கள் நடித்திருக்கிறார்கள். மும்பையில் ஜாமீன்கா, மராட்டியத்தில் கிஷோர்கதம், போஜ்புரியைச் சேர்ந்த ஜோகித் பதக், குஜராத்தைச் சேர்ந்த அபிமான் சிங் ஆகியோர் கார்த்தியுடன் மோதும் வில்லன்கள்.
1995 முதல் 2005 வரை 10 வருடங்களில் நடக்கும் கதை. செய்திதாள்களில் படிக்கும் குற்ற செய்திகளில் ஒன்றை படமாக்கி இருக்கிறோம்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X