search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகர் சங்க கட்டிடத்தில் கருணாநிதியின் பேனாவை வைக்க வேண்டும் - விஷால்
    X

    நடிகர் சங்க கட்டிடத்தில் கருணாநிதியின் பேனாவை வைக்க வேண்டும் - விஷால்

    நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துக் கொண்ட விஷால், நடிகர் சங்க கட்டிடத்தில் கருணாநிதியின் பேனாவை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். #KalaignarKarunanidhi #Vishal
    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் நடந்து வருகிறது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டுள்ளார்.

    இதில் விஷால் பேசும்போது, ‘புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டடத்தில் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை வைக்க வேண்டும். அது அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கு கருணாநிதியின் புகழை எடுத்துச் செல்லும்’ என்றார்.

    நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, ‘பராசக்தி படம் மட்டும் வராமல் இருந்தால், தமிழ் சினிமா 20 ஆண்டுகள் பின்நோக்கி சென்றிருக்கும்’ என்றார். 
    Next Story
    ×