என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
எனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்
Byமாலை மலர்30 March 2018 5:06 AM GMT (Updated: 30 March 2018 5:06 AM GMT)
தனக்கு கணவராக வருபவருக்கு கண்டிப்பாக இந்த விஷயம் தெரிந்திருக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
ஜெயம் ரவியுடன் ‘தாம் தூம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான கங்கனா ரணாவத் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். ‘மணி கர்னிகா’ என்ற இந்தி படத்தில், ராணி லட்சுமிபாய் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக வாள் ‘சண்டை’, ‘குதிரையேற்றம்’ போன்ற சாகச பயிற்சிகளையும் பெற்றுள்ளார்.
கங்கணா ரணாவத் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
“எனக்கு 31 வயது ஆகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிறந்தநாள் வரும்போது ஏதேனும் ஒரு சபதம் எடுத்துக் கொள்வார்கள். எனது பிறந்தநாளில் மரக்கன்றுகள் நட திட்டமிட்டேன். ஆண்டுக்கு ஒரு மரக்கன்று என்ற வகையில் 31 மரக்கன்றுகளை நட்டேன்.
இது மகிழ்ச்சியாக இருந்தது. மரக்கன்றுகள் நடுவதன் மூலம் மனஅழுத்தங்களை குறைக்க முடியும். என்னை சந்திக்கிறவர்கள் திருமணம் எப்போது? கணவராக வருகிறவருக்கு என்ன தகுதிகள் வேண்டும்? என்றெல்லாம் கேட்கிறார்கள்.
கணவராக வருகிறவர் நல்லவராக இருக்க வேண்டும். அழகானவராகவும் இருக்க வேண்டும். நன்றாக சிரிக்க வேண்டும். மற்றவர்களையும் சிரிக்க வைக்க வேண்டும். சமைக்க தெரிய வேண்டும். இதற்கு எல்லாம் மேலாக அவர் இந்திய நாட்டை நேசிக்கிறவராகவும் இருக்க வேண்டும். எனக்கு தேசபக்தி அதிகம்.
ஒருவேளை யாரையெனும் நான் காதலித்தால் கூட, பிறகு அவருக்கு நாட்டுப்பற்று இல்லை என்று தெரியவந்தால் உடனடியாக காதலை முறித்துக் கொள்வேன். தாய்மண் மீது அன்பு இல்லாதவரால் என் மீது எப்படி அன்பாக இருக்க முடியும்? என்னை காதலித்தால் மட்டும் போதாது. நாட்டையும் நேசிக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
கங்கணா ரணாவத் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
“எனக்கு 31 வயது ஆகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிறந்தநாள் வரும்போது ஏதேனும் ஒரு சபதம் எடுத்துக் கொள்வார்கள். எனது பிறந்தநாளில் மரக்கன்றுகள் நட திட்டமிட்டேன். ஆண்டுக்கு ஒரு மரக்கன்று என்ற வகையில் 31 மரக்கன்றுகளை நட்டேன்.
இது மகிழ்ச்சியாக இருந்தது. மரக்கன்றுகள் நடுவதன் மூலம் மனஅழுத்தங்களை குறைக்க முடியும். என்னை சந்திக்கிறவர்கள் திருமணம் எப்போது? கணவராக வருகிறவருக்கு என்ன தகுதிகள் வேண்டும்? என்றெல்லாம் கேட்கிறார்கள்.
கணவராக வருகிறவர் நல்லவராக இருக்க வேண்டும். அழகானவராகவும் இருக்க வேண்டும். நன்றாக சிரிக்க வேண்டும். மற்றவர்களையும் சிரிக்க வைக்க வேண்டும். சமைக்க தெரிய வேண்டும். இதற்கு எல்லாம் மேலாக அவர் இந்திய நாட்டை நேசிக்கிறவராகவும் இருக்க வேண்டும். எனக்கு தேசபக்தி அதிகம்.
ஒருவேளை யாரையெனும் நான் காதலித்தால் கூட, பிறகு அவருக்கு நாட்டுப்பற்று இல்லை என்று தெரியவந்தால் உடனடியாக காதலை முறித்துக் கொள்வேன். தாய்மண் மீது அன்பு இல்லாதவரால் என் மீது எப்படி அன்பாக இருக்க முடியும்? என்னை காதலித்தால் மட்டும் போதாது. நாட்டையும் நேசிக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X