என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கங்கனா ரணாவத்"
- கங்கனா ரணாவத்தின் ‘தேஜஸ்’ திரைப்படம் 27-ஆம் தேதி வெளியானது.
- முதல் நாளில் இருந்தே இப்படம் வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் சமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடந்து கங்கனா ரணாவத்தின் 'தேஜஸ்' திரைப்படம் 27-ஆம் தேதி வெளியானது. சர்வேஷ் மேவாரா இயக்கிய இந்தப் படத்தில் கங்கனா விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது. கூட்டம் இல்லாததால் பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், நடிகை கங்கனா ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கொரோனாவுக்கு முன்பே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்தது. அதற்குப் பின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இலவச டிக்கெட்டுகள் உட்பட நியாயமான சலுகைகள் வழங்கப்பட்டும் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. அந்தச் சரிவு தொடர்கிறது. அதனால், திரையரங்குகளுக்குச் சென்று படங்களைக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் திரையரங்கை நடத்துகிறவர்கள் வாழ முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
Even before covid theatrical footfalls were dipping drastically post covid it has become seriously rapid.
— Kangana Ranaut (@KanganaTeam) October 28, 2023
Many theatres are shutting down and even after free tickets and many reasonable offers drastic footfall decline is continuing.
Requesting people to watch films in theatres… pic.twitter.com/Mty9BTcpkD
- கங்கனா சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடித்து இருந்தார்.
- இவருக்கு சிறந்த நடிகைக்கான சினிமா விருது வழங்கப்பட்டது.
ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கங்கனா ரணாவத். அடுத்ததாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தன்மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். சில ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடித்து இருந்தார். கேங்ஸ்டர் என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான சினிமா விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து இந்தி சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் கங்கனா ரணாவத் சர்ச்சையாக பேசிய கருத்துக்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு ஓய் பிரிவு பாதுகாப்புடன் வெளியில் வருகிறார். நவராத்திரி திருவிழாவை ஒட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராவணன் உருவ பொம்மையை அம்பு எய்து எரித்தார் 50 வருடத்திற்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரே பெண்மணி கங்கனா என்ற பெயரை பெற்றார்.
இந்நிலையில் இவர் நடித்த தேஜஸ் படம் இப்போது வெளியாகியுள்ளது. இதையொட்டி அவர் கூறும்போது, "தேஜஸ் படத்திற்கு பிறகு தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க இருக்கிறேன். விஜய் சேதுபதியுடன் திரில்லர் படத்தில் நடிக்க உள்ளேன். அதற்கு அடுத்ததாக தனு வெட்ஸ் மூன்றாம் பாகத்திலும் நோட்டிபினோதினி என்ற படத்திலும் நடிக்க இருக்கிறேன்" என்றார்.
- ’சந்திரமுகி -2’ திரைப்படத்தில் நடிகை கங்கனா சந்திரமுகியாக நடித்துள்ளார்.
- இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னையில் 'சந்திரமுகி -2' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், "சந்திரமுகி -2 திரைப்படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. கங்கனா இந்த படத்தில் வந்தது மிகப்பெரிய பிளஸ். இந்த படத்தில் ஜோதிகா போன்று கங்கனா நடித்துள்ளாரா? என்று அனைவரும் என்னிடம் கேட்கிறார்கள். ஜோதிகாவையும், கங்கனாவையும் ஒப்பிடவே கூடாது. ஜோதிகா, தன்னை சந்திரமுகியா நினைத்துக் கொண்டார். சந்திரமுகி எப்படி இருப்பார் என்று நடித்து காண்பித்தார். இந்த படத்தில் தான் ஒரிஜினல் சந்திரமுகி யாருனு காண்பிக்கிறார்கள். கங்கனா 'சந்திரமுகி'கதாபாத்திரத்தை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறார். இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி" என்று பேசினார்.
- இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'.
- லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'சந்திரமுகி -2' திரைப்படத்தின் 'ஆட்டநாயகி' பாடல் வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி வரிகளில் ஸ்ரீநிதி திருமலா பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- 'சந்திரமுகி -2' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் சந்திரமுகியாக கங்கனா நடிக்கிறார்.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் கதை கேட்காமலேயே சந்திரமுகியாக நடிக்க கங்கனா ஒப்புக் கொண்டதாக இயக்குனர் பி. வாசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கங்கனாவிடம் இந்திப் படம் ஒன்றின் கதையை சொல்ல சென்றதாகவும் அப்போது 'சந்திரமுகி- 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதையும் அதில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்க யாரையும் முடிவு செய்யவில்லை என்று தெரிந்ததும் நானே நடிக்கிறேன் என்று கங்கனா ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
- இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத்.
- இவர் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை இயக்கியும் வருகிறார்.
இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத்.
- இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் தற்போது 'சந்திரமுகி 2', 'எமர்ஜென்சி' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக உள்ள கங்கனா சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்.
கங்கனா ரணாவத்
இமாசலப்பிரதேசத்தில் பஷிநாத் கோவிலில் பெண் ஒருவர் இரவு ஆடைகளை அணிந்து கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ததாக ஒரு நபர் இணையத்தில் புகைப்படத்தை பகிர்ந்து அந்த பெண்ணை விமர்சித்திருந்தார். அந்த பதிவை பகிர்ந்த நடிகை கங்கனா அந்த பெண்கள் குறித்து தனது ஆவேசத்தை வெளிப்படுத்தி தனக்கு வாடிகனில் நடந்த சம்பவத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.
ஷார்ட்ஸ் அணிந்த பெண் -கங்கனா ரணாவத்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இவை மேற்கத்திய ஆடைகள், வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டவை, நான் ஷார்ட்ஸ் மற்றும் டி ஷர்ட் அணிந்திருந்ததற்காக வாடிகனில் என்னை வளாகத்திற்குள் கூட அனுமதிக்கவில்லை. நான் மீண்டும் எனது ஓட்டலுக்குச் சென்று உடை மாற்ற வேண்டியிருந்தது. சாதாரணமாக இரவு ஆடைகளை அணியும் இவர்கள் கோமாளிகள் மற்றும் சோம்பேறிகள். அவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை, ஆனால் அத்தகைய முட்டாள்களுக்கு கடுமையான விதிமுறைகள் இருக்க வேண்டும் ..." என்று பதிவிட்டுள்ளார்.
These are western clothes, invented and promoted by white people, I was once at the Vatican wearing shorts and t shirt, I wasn't even allowed in the premises, I had to go back to my hotel and change…. These clowns who wear night dresses like they are casuals are nothing but lazy… https://t.co/EtPssi3ZZj
— Kangana Ranaut (@KanganaTeam) May 26, 2023
- ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடந்த மே 5-ஆம் தேதி வெளியானது.
- இப்படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும் கணிசமான வசூலை பெற்று வருகிறது.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும் கணிசமான வசூலை பெற்று வருகிறது. நடந்தது உண்மையா அல்லது கற்பனையா என்பதைத்தாண்டி ஒரு கதையாக இந்தப்படத்தைப் பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். திரையிட்ட இடங்களில் ஓரளவுக்கு வசூலை கொடுத்து வருகிறது.
தி கேரளா ஸ்டோரி
இந்த நிலையில் படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருபவர்களை கடுமையாக சாடியிருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:- இப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. படத்தை தடை செய்ய வேண்டும் என பல தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து ஆதரவு அளித்துள்ளது என்றால் அதை நிச்சயம் ஏற்று கொள்ளத்தானே வேண்டும்.
ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பினரை தவிர வேறு யாரையும் தவறாக சித்தரிக்கவில்லை என நினைக்கிறன். அப்படி அது உங்களை பாதிப்பதாக நினைத்தால் நீங்கள் தான் தீவிரவாதி என்று பேசியிருக்கிறார்.
- நடிகை கங்கனா தற்போது 'எமர்ஜென்சி' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.
கங்கனா -ஜி.வி.பிரகாஷ்
இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'எமர்ஜென்சி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கங்கனா ரணாவத்தின்'எமர்ஜென்சி' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை உருவாக்கி வருகிறேன். இந்த பிரம்மாண்டமான திரைப்படம் விரைவில் வெளிவர காத்திருக்கிறது" என்று கங்கனாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
Composing with @KanganaTeam ji for #emergency songs and bgscore … @manojmuntashir @ManikarnikaFP … waiting for this mammoth of a film to unveil itself soon … pic.twitter.com/DoKvDRIp8F
— G.V.Prakash Kumar (@gvprakash) April 22, 2023
- இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத்.
- இவர் சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் வருகிறார்.
தமிழில் 'தாம்தூம்' படத்தில் நாயகியாகவும், 'தலைவி' படத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத், இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் வருகிறார்.
கங்கனா ரணாவத்
இந்தி திரையுலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்தும் வருகிறார். இந்நிலையில், மும்பையில் தாதா சாகேப் பால்கே இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ரன்பீர் கபூருக்கும், சிறந்த நடிகைக்கான விருது அவரது மனைவி அலியாபட்டுக்கும் வழங்கப்பட்டது. சினிமா வாரிசுகள் என்பதால் இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக கங்கனா சாடி உள்ளார்.
"விருதுகள் பெறும் தகுதி இவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா. சிறந்த நடிகருக்கான விருது 'காந்தாரா' நடிகர் ரிஷப் ஷெட்டிக்கும், நடிகைக்கான விருது மிருணாள் தாகூருக்கும், சிறந்த படத்துக்கான விருது 'காந்தாரா'வுக்கும் வழங்கி இருக்க வேண்டும்'' என்று இணையத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
- இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா.
- ‘சந்திரமுகி’ படத்தில் ஜோதிகா நடித்த மாதிரி என்னால் நடிக்க முடியாது என்று கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளார்.
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடித்து 2005-ல் வெளியான 'சந்திரமுகி' பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதில் பிரபு, வடிவேலு, நாசர் ஆகியோரும் நடித்து இருந்தனர். 'சந்திரமுகி' படத்தில் ஜோதிகாவின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. குறிப்பாக 'ரா ரா' என்ற பாடலில் சந்திரமுகியாக மாறி ஜோதிகா ஆடும் நடனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
தற்போது 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகம் பி.வாசு இயக்கத்தில் தயாராகி வருகிறது. இதில் ஜோதிகாவுக்கு பதில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் நாயகனாக வருகிறார். 'சந்திரமுகி-2' படத்தில் ஜோதிகாவுக்கு இணையாக கங்கனா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் 2019-ல் ஜோதிகா பேசிய வீடியோ ஒன்றை கங்கனா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஜோதிகாவிடம் பாலிவுட்டில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்க, அதற்கு அவர் கங்கனா ரணாவத் என்று பதில் அளித்து இருப்பார்.
இந்த வீடியோவை மேற்கோள் காட்டி கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், "ஜோதிகா இப்படி சொல்லி இருப்பது எனக்கு ஊக்கமளிக்கிறது. 'சந்தரமுகி' படத்தில் ஜோதிகா வெளிப்படுத்திய சிறந்த நடிப்பை இப்போது தினமும் நான் பார்த்து வருகிறேன். காரணம் 'சந்திரமுகி-2' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தற்போது படமாக்கி வருகிறோம். 'சந்திரமுகி' முதல் பாகத்தில் ஜோதிகா வெளிப்படுத்திய நடிப்பு வியப்பை தருகிறது. அவர் நடிப்புக்கு இணையாக நடிப்பது என்பது சாத்தியமில்லாத விஷயம்'' என்று கங்கனா பதிவிட்டுள்ளார்.
- தமிழில் 'தாம்தூம்', 'தலைவி' படங்களில் நடித்தவர் கங்கனா ரணாவத்.
- கங்கனா ரணாவத் தன்னை எதிர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழில் 'தாம்தூம்' படத்தில் நாயகியாகவும், 'தலைவி' படத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத், இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக இருக்கிறார். வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் வருகிறார்.
மராட்டிய அரசுடன் மோதினார். இதனால் மும்பையில் உள்ள அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு வீட்டு மாடியிலும், கட்டிடத்திலும், பார்க்கிங்கிலும் 'ஜூம் லென்ஸ்' வைத்து தன்னை யாரோ வேவு பார்ப்பதாக புகார் தெரிவித்து இருந்தார். தன்னை வேவு பார்ப்பவர் அவரது மனைவியை பெரிய நடிகையாக்க முயற்சி செய்வதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது கங்கனா வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில், ''என்னை பற்றி கவலைப்படுகிறவர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். நேற்றிரவு முதல் என்னை சுற்றி சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் எதுவும் இல்லை. யாரும் என்னை பின்தொடரவும் இல்லை. சரியாக இருந்து கொள்ளுங்கள். இல்லையேல் வீட்டுக்குள் புகுந்து உங்களை தாக்குவேன். என்னை மனநோயாளி என்று அழைப்பவர்களுக்கு எதிராக நான் எந்த அளவுக்கு செல்வேன் என்று தெரியவில்லை" என்று பதிவிட்டுள்ளார். இது பரபரப்பாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்