search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சினிமா வாரிசுகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.. நடிகை கங்கனா கண்டனம்..
    X

    கங்கனா ரணாவத்

    சினிமா வாரிசுகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.. நடிகை கங்கனா கண்டனம்..

    • இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத்.
    • இவர் சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் வருகிறார்.

    தமிழில் 'தாம்தூம்' படத்தில் நாயகியாகவும், 'தலைவி' படத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத், இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் வருகிறார்.


    கங்கனா ரணாவத்

    இந்தி திரையுலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்தும் வருகிறார். இந்நிலையில், மும்பையில் தாதா சாகேப் பால்கே இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ரன்பீர் கபூருக்கும், சிறந்த நடிகைக்கான விருது அவரது மனைவி அலியாபட்டுக்கும் வழங்கப்பட்டது. சினிமா வாரிசுகள் என்பதால் இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக கங்கனா சாடி உள்ளார்.

    "விருதுகள் பெறும் தகுதி இவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா. சிறந்த நடிகருக்கான விருது 'காந்தாரா' நடிகர் ரிஷப் ஷெட்டிக்கும், நடிகைக்கான விருது மிருணாள் தாகூருக்கும், சிறந்த படத்துக்கான விருது 'காந்தாரா'வுக்கும் வழங்கி இருக்க வேண்டும்'' என்று இணையத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×