என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மனைவிக்கு ஆட்டோவில் ஊர் சுற்றி காண்பித்த அக்ஷய் குமார்
Byமாலை மலர்28 March 2018 4:07 AM GMT (Updated: 28 March 2018 4:07 AM GMT)
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அக்ஷய் குமார், தனது மனைவியை ஆட்டோவில் உட்கார வைத்து ஊர் சுற்றி காண்பித்திருக்கிறார்.
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இவர் ரஜினிக்கு வில்லனாக ‘2.O’ படத்தில் நடித்துள்ளார். சங்கர் இயக்கியுள்ள இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவர் தனது கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
இதற்காக தினமும் அதிகாலையில் வாக்கிங் செல்லுவார். அப்படி இரண்டு தினங்களுக்கு முன்பு வாக்கிங் சென்ற அக்ஷய் குமார் திடீரெண்டு ஆட்டோ ஒன்றை ஓட்டி வந்திருக்கிறார். இதைப்பார்த்து ஆச்சர்யம் அடைந்த அவரது மனைவியை, ஆட்டோவின் பின்னாடி உட்கார வைத்து ஜாலியாக ஒரு ரைடு போயிருக்கிறார்.
ஆட்டோவில் அதிகாலை 4 மணிக்கு தன் மனைவியுடன் கிளம்பிய அக்ஷய் குமார் காலை 9 மணிக்கு வீடு திரும்பி இருக்கிறார். அக்ஷயே ஆட்டோவை ஓட்டி சென்றதால் பலரும் அவரை யாரோ டிரைவர் என்றுதான் எண்ணியிருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே அவரை அடையாளம் கண்டுகொண்டனர். ரசிகர்கள் கூட்டம் எதிலும் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பாக இந்த ஜோடி வீடு வந்து சேர்ந்தது. கணவருடன் ஆட்டோவில் பயணித்ததை டுவிங்கில் கண்ணா தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X