search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காலாவிற்கு குரல் கொடுத்த நானா படேகர்
    X

    காலாவிற்கு குரல் கொடுத்த நானா படேகர்

    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தில் நடித்துள்ள நானா படேகர், தனக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணிகளை இன்று முடித்துள்ளார்.
    ‘கபாலி’ படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பா.இரஞ்சித் ஆகியோர் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி உள்ளனர். இப்படத்தினை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். லைகா புரொடக்க்ஷன்ஸ் இந்த படத்தினை வெளியிடுகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திர்ற்கு இசை அமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர், அஞ்சலி படேல், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலர் நடித்துள்ளனர்.

    சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. டீசர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று யூ-டியூபில் டாப் ட்ரெண்டிங்கில் தற்போதும் உள்ளது.

    இந்நிலையில் காலா படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வில்லன் வேடத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் நானா படேகர் அவருக்கான தமிழ் மற்றும் ஹிந்தி டப்பிங் பணியை இன்று முடித்துள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக உள்ளது.
    Next Story
    ×