என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
சாயிஷாவுடன் நடனம் ஆட பயந்த ஆர்யா
ஆர்யா-சாயிஷா ஜோடியாக நடிக்கும் படம் ‘கஜினிகாந்த்’. சந்தோஷ் பி.விஜயக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். பாலமுரளி பாலு இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
படக்குழுவினர் உள்பட பலர் பங்கேற்ற இதில் ஆர்யா பேசியது....
“சாயிஷா ‘வனமகன்’ படத்தில் நன்றாக நடித்திருந்தார். அதே சமயம் அதிரடியாக நடனம் ஆடி இருந்தார். எனவே, இந்த ‘கஜினிகாந்த்’ படத்தில் அவருடன் பாடலுக்கு நடனம் ஆட பயந்து கொண்டிருந்தேன். நானும் சாயிஷாவும் நடனம் ஆடிய பாடல் காட்சி பாங்காங்கில் படமாக்கப்பட்டது. ஒரு வழியாக கஷ்டப்பட்டு ஆடினேன்.
பின்னர் சென்னை வந்து பாடலை எடிட்டிங் செய்தபோது, சாயிஷா பயங்கரமாக நடனம் ஆடி இருக்கிறார். நீங்கள் பக்கத்தில் சும்மா நிற்கிறீர்கள் என்று சொன்னார்கள். அந்த அளவுக்கு இந்த படத்திலும் சாயிஷா பிரமாதமாக நடனம் ஆடி இருக்கிறார். தமிழ் அவருக்கு தெரியாது. என்றாலும், தமிழ் வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டு நடிப்பார். அந்த அளவுக்கு நடிப்பில் அக்கறை கொண்டவர்” என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்