என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சிங்கத்துடன் இணைந்து நடிப்பேன்: கார்த்தி நம்பிக்கை
Byமாலை மலர்13 Nov 2017 6:07 AM GMT (Updated: 13 Nov 2017 6:07 AM GMT)
பொருத்தமான கதை அமைந்தால் சிங்கம் சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
நடிகர் கார்த்தி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
“சினிமாவில் கதைதான் முக்கியம். நல்ல கதையம்சம் உள்ள படங்களைத்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள். எனவே கதை தேர்வில் நான் கவனமாக இருக்கிறேன். நல்ல கதையாகவும் என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும்படியும் பார்த்துக் கொள்கிறேன். பருத்தி வீரன் படத்தில் இருந்து ஒவ்வொரு கதையும் எனக்கு வித்தியாசமாகவே அமைந்துள்ளன.
‘நான் மகான் அல்ல’ படத்தில் ஒரு மாதிரியும் ‘சிறுத்தை’ படத்தில் இன்னொரு மாதிரியும் வந்தேன். காஸ்மோரா படத்தில் வேறொரு பரிணாமம் இருந்தது. சகுனி அரசியல் படமாக வந்தது. இந்தியில் வந்த ‘தங்கல்’ மற்றும் பாகுபலி படங்களை பார்த்தபோது அதுமாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
‘தங்கல்’ பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தாலும் கடைசியில் கதாநாயகனே பிரதானமாக தெரிந்தார். ‘மனம்’ மாதிரியான படங்களில் நடிக்கவும் ஆசை உள்ளது. தற்போது நான் நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படமும் வித்தியாசமான கதை. இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறேன்.
போலீசார் காவல் பணிகளில் ஈடுபடுகிறார்கள். குற்றங்களை தடுக்க ரோந்து செல்கிறார்கள். இவற்றை தவிர்த்து அவர்களுக்கு இருக்கும் சொந்த வாழ்க்கையை இந்த படம் பேசும். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகி உள்ளது. சதுரங்கம் படத்தை எடுத்து பிரபலமான வினோத் டைரக்டு செய்துள்ளார். ரகுல்பிரீத்சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அதிரடி படமாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ தயாராகி உள்ளது. ‘ஆர்கானிக்’ உடைகளை இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளோம். சூர்யாவுடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன். அதற்கான கதை அமைந்தால் இருவரும் சேர்ந்து நடிப்போம். நடிகர் சங்க கட்டிட நிதி திரட்டுவதற்காக நடிக்க இருந்த பட வேலைகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.”
இவ்வாறு கார்த்தி கூறினார்.
“சினிமாவில் கதைதான் முக்கியம். நல்ல கதையம்சம் உள்ள படங்களைத்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள். எனவே கதை தேர்வில் நான் கவனமாக இருக்கிறேன். நல்ல கதையாகவும் என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும்படியும் பார்த்துக் கொள்கிறேன். பருத்தி வீரன் படத்தில் இருந்து ஒவ்வொரு கதையும் எனக்கு வித்தியாசமாகவே அமைந்துள்ளன.
‘நான் மகான் அல்ல’ படத்தில் ஒரு மாதிரியும் ‘சிறுத்தை’ படத்தில் இன்னொரு மாதிரியும் வந்தேன். காஸ்மோரா படத்தில் வேறொரு பரிணாமம் இருந்தது. சகுனி அரசியல் படமாக வந்தது. இந்தியில் வந்த ‘தங்கல்’ மற்றும் பாகுபலி படங்களை பார்த்தபோது அதுமாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
‘தங்கல்’ பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தாலும் கடைசியில் கதாநாயகனே பிரதானமாக தெரிந்தார். ‘மனம்’ மாதிரியான படங்களில் நடிக்கவும் ஆசை உள்ளது. தற்போது நான் நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படமும் வித்தியாசமான கதை. இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறேன்.
போலீசார் காவல் பணிகளில் ஈடுபடுகிறார்கள். குற்றங்களை தடுக்க ரோந்து செல்கிறார்கள். இவற்றை தவிர்த்து அவர்களுக்கு இருக்கும் சொந்த வாழ்க்கையை இந்த படம் பேசும். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகி உள்ளது. சதுரங்கம் படத்தை எடுத்து பிரபலமான வினோத் டைரக்டு செய்துள்ளார். ரகுல்பிரீத்சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அதிரடி படமாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ தயாராகி உள்ளது. ‘ஆர்கானிக்’ உடைகளை இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளோம். சூர்யாவுடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன். அதற்கான கதை அமைந்தால் இருவரும் சேர்ந்து நடிப்போம். நடிகர் சங்க கட்டிட நிதி திரட்டுவதற்காக நடிக்க இருந்த பட வேலைகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.”
இவ்வாறு கார்த்தி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X