என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`துருவ நட்சத்திரம்' படக்குழுவில் இருந்து வெளியான புதிய தகவல்
Byமாலை மலர்2 Nov 2017 7:09 AM GMT (Updated: 2 Nov 2017 7:09 AM GMT)
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `துருவ நட்சத்திரம்' படக்குழுவில் இருந்து புதுப்புது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கவுதம் மேனன் தற்போது விக்ரமை வைத்து `துருவ நட்சத்திரம்' படத்தை உருவாக்குவதில் பிசியாக இருக்கிறார். அதேநேரத்தில் தாமதமாகியிருக்கும் தனுஷின் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பு சுமார் 15 நாட்கள் எடுக்கப்பட வேண்டி இருக்கிறது.
இரண்டு படங்களையும் முடித்த பிறகு இந்த இரு படங்களையும் சில வார இடைவெளியில் வெளியிட கவுதம் மேனன் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் `துருவ நட்சத்திரம்' படத்தை மூன்று பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த இரு படங்களை முடித்த பிறகு கவுதம் மேனன் அடுத்ததாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம். தகவலின்படி புனித் ராஜ்குமார் மற்றும் அனுஷ்கா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் அருண் விஜய்யின் 25-வது படத்தை கவுதம் மேனன் இயக்கவிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். அது இதுவாக இருக்குமா அல்லது புதிய படமா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு படங்களையும் முடித்த பிறகு இந்த இரு படங்களையும் சில வார இடைவெளியில் வெளியிட கவுதம் மேனன் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் `துருவ நட்சத்திரம்' படத்தை மூன்று பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த இரு படங்களை முடித்த பிறகு கவுதம் மேனன் அடுத்ததாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம். தகவலின்படி புனித் ராஜ்குமார் மற்றும் அனுஷ்கா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் அருண் விஜய்யின் 25-வது படத்தை கவுதம் மேனன் இயக்கவிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். அது இதுவாக இருக்குமா அல்லது புதிய படமா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X