என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விஜய்யின் அடுத்த படம் பற்றிய புதிய அப்டேட்
Byமாலை மலர்25 Oct 2017 1:15 PM GMT (Updated: 25 Oct 2017 1:15 PM GMT)
மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘மெர்சல்’ படம், திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அட்லி இயக்கிய இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் பல தடைகளை தாண்டி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. தற்போது இந்த படத்திற்கு ‘அங்கமாலி டைரீஸ்’, ‘சோலோ’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே விஜய், முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே சூப்பர் ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக உள்ளது. இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. தற்போது இந்த படத்திற்கு ‘அங்கமாலி டைரீஸ்’, ‘சோலோ’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே விஜய், முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே சூப்பர் ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக உள்ளது. இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X