என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அடுத்த கட்டத்தில் விஜய் சேதுபதியின் `ஜுங்கா'
Byமாலை மலர்25 Oct 2017 5:11 AM GMT (Updated: 25 Oct 2017 5:12 AM GMT)
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் `ஜுங்கா' படத்தின் படப்பிடிப்பு அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக சாயிஷா அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாயிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் `ஜுங்கா'.
முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் பாரீசில் நடக்கிறது. அதற்காக சமீபத்தில் பாரீஸ் சென்ற படக்குழு அங்கு தேவையான காட்சிகளை படமாக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தற்போது ஆஸ்ட்ரியா சென்றுள்ளதாக சாயிஷா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அங்கு படத்தில் சில முக்கிய காட்சிகளும், பாடல்களும் படமாக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
`இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்திற்கு இசையமைத்த சித்தார்த் விபின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இந்த படத்தை விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ஏ&பி குரூப்ஸ் கைப்பற்றியிருக்கிறது.
விஜய் சேதுபதி - கோகுல் கூட்டணியில் உருவாவதால் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் பாரீசில் நடக்கிறது. அதற்காக சமீபத்தில் பாரீஸ் சென்ற படக்குழு அங்கு தேவையான காட்சிகளை படமாக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தற்போது ஆஸ்ட்ரியா சென்றுள்ளதாக சாயிஷா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அங்கு படத்தில் சில முக்கிய காட்சிகளும், பாடல்களும் படமாக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
`இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்திற்கு இசையமைத்த சித்தார்த் விபின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இந்த படத்தை விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ஏ&பி குரூப்ஸ் கைப்பற்றியிருக்கிறது.
விஜய் சேதுபதி - கோகுல் கூட்டணியில் உருவாவதால் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X