என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கொடிவீரனுக்காக மொட்டை போட்ட பூர்ணா
Byமாலை மலர்16 Oct 2017 7:05 AM GMT (Updated: 16 Oct 2017 7:05 AM GMT)
முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொடிவீரன்’ படத்திற்காக நடிகை பூர்ணா மொட்டை அடித்துள்ளார்.
சசிகுமார் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் ‘கொடி வீரன்’. இதில் மகிமா நம்பியார், சனுஷா, பூர்ணிமா, பசுபதி, விதார்த், பாலசரவணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். முத்தையா இயக்கும் இந்த படத்துக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படம் பற்றி சசிகுமார் கூறுகிறார்...
“அண்ணன்-தங்கை பாசம் பற்றிய கதையில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. ‘குட்டிப்புலி’ படத்தில் நடிக்கும் போது, ‘கிராமத்து பின்னணியில் அழகான அண்ணன்-தங்கை கதை ஒன்று தயார் செய்யுங்கள்’ என்று இயக்குனரிடம் கூறி இருந்தேன். அவர் எனக்காக உருவாக்கிய கதை தான் ‘கொடிவீரன்’. இந்த படத்தில் எனது தங்கையாக சனுஜா நடிக்கிறார். காதலியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். ஒரு முக்கியமான பாத்திரத்தில் பூர்ணா நடிக்கிறார். 2 சீனுக்காக மொட்டை போட்டு நடித்தார். படம் வந்த பிறகு பூர்ணா வேடம் பேசப்படும்.
எனக்கு கோவில் விழாவில் குறி சொல்லும் கொடிவீரன் வேடம். தங்கை பேச்சுக்கு மறு பேச்சு பேசாத அண்ணன். இந்த படத்தில் வில்லன் என்று யாரும் கிடையாது. சூழ்நிலையும், கதாபாத்திரங்கள் எடுக்கும் சில தவறான முடிவுகளும் தான் வில்லன். சிவாஜி சாரின் ‘பாசமலர்’ போல இதுவும் அண்ணன்-தங்கை பாசத்தில் உருகவைக்கும் நவீன பாசமலர்’ என்றார்.
இந்த படம் பற்றி சசிகுமார் கூறுகிறார்...
“அண்ணன்-தங்கை பாசம் பற்றிய கதையில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. ‘குட்டிப்புலி’ படத்தில் நடிக்கும் போது, ‘கிராமத்து பின்னணியில் அழகான அண்ணன்-தங்கை கதை ஒன்று தயார் செய்யுங்கள்’ என்று இயக்குனரிடம் கூறி இருந்தேன். அவர் எனக்காக உருவாக்கிய கதை தான் ‘கொடிவீரன்’. இந்த படத்தில் எனது தங்கையாக சனுஜா நடிக்கிறார். காதலியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். ஒரு முக்கியமான பாத்திரத்தில் பூர்ணா நடிக்கிறார். 2 சீனுக்காக மொட்டை போட்டு நடித்தார். படம் வந்த பிறகு பூர்ணா வேடம் பேசப்படும்.
எனக்கு கோவில் விழாவில் குறி சொல்லும் கொடிவீரன் வேடம். தங்கை பேச்சுக்கு மறு பேச்சு பேசாத அண்ணன். இந்த படத்தில் வில்லன் என்று யாரும் கிடையாது. சூழ்நிலையும், கதாபாத்திரங்கள் எடுக்கும் சில தவறான முடிவுகளும் தான் வில்லன். சிவாஜி சாரின் ‘பாசமலர்’ போல இதுவும் அண்ணன்-தங்கை பாசத்தில் உருகவைக்கும் நவீன பாசமலர்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X