என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தீபாவளிக்கு மெர்சல் கண்டிப்பாக ரிலீசாகும்: பேச்சுவார்த்தைக்கு பிறகு விஷால் பேட்டி
Byமாலை மலர்13 Oct 2017 9:50 AM GMT (Updated: 13 Oct 2017 9:50 AM GMT)
கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால் தீபாவளிக்கு மெர்சல் படத்துடன் மற்றொரு படமும் வெளியாகும் என்று கூறினார்.
சினிமா டிக்கெட்டுக்கு கேளிக்கை வரி விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
ஏற்கனவே சினிமா டிக்கெட்களுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி செலுத்தப்படுகிறது. உள்ளாட்சி கேளிக்கை வரியையும் செலுத்தினால் தியேட்டர்களும், திரைப்பட தயாரிப்பாளர்களும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே உள்ளாட்சி கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கூடுதல் கேளிக்கை வரி காரணமாக, திரைக்கு வர இருந்த புதிய படங்களை பட அதிபர்கள் சங்கம் வெளியிடாமல் நிறுத்தி வைத்தது.
இதற்கிடையே கூடுதலாக விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் திரைப்பட உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் அரசுடன் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் கூறும் போது,
* நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தை விட பொதுமக்கள் அதிகமாக கொடுக்கத் தேவையில்லை.
* திரையரங்கில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் அளிக்கலாம்
* திரையரங்குகள் அரசு சார்பில் கண்காணிக்கப்படும்
* அனைத்து கட்டணங்களும் விதிமுறைக்கு உட்பட்டே இருக்கும்.
* கேளிக்கை வரி விதிப்பு 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைப்பு
* திரையரங்குகளில் திண்பண்டங்கள், குளிர்பானங்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது. குறைந்தபட்ச சில்லறை விலைக்கு மட்டுமே விற்க வேண்டும்.
* தீபாவளிக்கு இரு படங்கள் மட்டுமே ரிலீஸ். விஜய்யின் மெர்சல் படம் ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது. அதுதவிர்த்து மேயாத மான், சென்னையில் ஒரு நாள்-2, கொடிவீரன், அறம் உள்ளிட்ட படங்களில் ஒரு படம் மட்டுமே ரிலீசாக இருக்கிறது.
இவ்வாறு விஷால் கூறினார்.
ஏற்கனவே சினிமா டிக்கெட்களுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி செலுத்தப்படுகிறது. உள்ளாட்சி கேளிக்கை வரியையும் செலுத்தினால் தியேட்டர்களும், திரைப்பட தயாரிப்பாளர்களும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே உள்ளாட்சி கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கூடுதல் கேளிக்கை வரி காரணமாக, திரைக்கு வர இருந்த புதிய படங்களை பட அதிபர்கள் சங்கம் வெளியிடாமல் நிறுத்தி வைத்தது.
இதற்கிடையே கூடுதலாக விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் திரைப்பட உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் அரசுடன் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் கூறும் போது,
* நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தை விட பொதுமக்கள் அதிகமாக கொடுக்கத் தேவையில்லை.
* திரையரங்கில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் அளிக்கலாம்
* திரையரங்குகள் அரசு சார்பில் கண்காணிக்கப்படும்
* அனைத்து கட்டணங்களும் விதிமுறைக்கு உட்பட்டே இருக்கும்.
* கேளிக்கை வரி விதிப்பு 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைப்பு
* திரையரங்குகளில் திண்பண்டங்கள், குளிர்பானங்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது. குறைந்தபட்ச சில்லறை விலைக்கு மட்டுமே விற்க வேண்டும்.
* தீபாவளிக்கு இரு படங்கள் மட்டுமே ரிலீஸ். விஜய்யின் மெர்சல் படம் ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது. அதுதவிர்த்து மேயாத மான், சென்னையில் ஒரு நாள்-2, கொடிவீரன், அறம் உள்ளிட்ட படங்களில் ஒரு படம் மட்டுமே ரிலீசாக இருக்கிறது.
இவ்வாறு விஷால் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X