என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`மிஸ்டர்.சந்திரமௌலி' படத்தில் இணையும் இரு தேசிய விருது இயக்குநர்கள்
Byமாலை மலர்10 Oct 2017 5:39 AM GMT (Updated: 10 Oct 2017 5:39 AM GMT)
திரு இயக்கத்தில் கார்த்திக் - கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்க இருக்கும் `மிஸ்டர்.சந்திரமௌலி' படத்தில் நடிக்க இரு தேசிய விருது இயக்குநர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்னர்.
கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘ஹரஹர மஹாதேவகி’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
`நான் சிகப்பு மனிதன்' படத்தை இயக்கிய திரு கவுதம் கார்த்திக்கை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக், கவுதம் கார்த்திக்குடன் முதல்முறையாக இணைந்து நடிக்கிறார். கவுதம் கார்த்திக் ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா, வரலட்சுமி நடிக்கின்றனர். சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு `மிஸ்டர்.சந்திரமௌலி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பங்குபெரும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேசிய விருது இயக்குநர்கள் இருவர் இப்படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. இயக்குநர் திருவின் உறவினரும், இயக்குநருமான அகத்தியன் மற்றும் இயக்குநர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.
இதில் அகத்தியன், கார்த்தியை வைத்து கோகுலத்தில் சீதை என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கார்த்திக்கின் நண்பராக அகத்தியன் நடிப்பதாக கூறப்படுகிறது.
நவம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.
`நான் சிகப்பு மனிதன்' படத்தை இயக்கிய திரு கவுதம் கார்த்திக்கை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக், கவுதம் கார்த்திக்குடன் முதல்முறையாக இணைந்து நடிக்கிறார். கவுதம் கார்த்திக் ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா, வரலட்சுமி நடிக்கின்றனர். சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு `மிஸ்டர்.சந்திரமௌலி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பங்குபெரும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேசிய விருது இயக்குநர்கள் இருவர் இப்படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. இயக்குநர் திருவின் உறவினரும், இயக்குநருமான அகத்தியன் மற்றும் இயக்குநர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.
இதில் அகத்தியன், கார்த்தியை வைத்து கோகுலத்தில் சீதை என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கார்த்திக்கின் நண்பராக அகத்தியன் நடிப்பதாக கூறப்படுகிறது.
நவம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X