என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிகை கடத்தல் விவகாரம்: திலீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம்
Byமாலை மலர்3 Oct 2017 6:19 AM GMT (Updated: 3 Oct 2017 6:19 AM GMT)
நடிகை கடத்தல் விவகாரத்தில் நடிகர் திலீப்புக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
கேரளாவில் பிரபல மலையாள நடிகையை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி ஜெயிலுக்குச் சென்ற திலீப், ஜாமீனில் விடுவிக்க கோரி அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 2 முறையும் கேரள ஐகோர்ட்டில் 2 முறையும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து திலீப் 5-வது முறையாக கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக அரசு வக்கீலும், திலீப்புக்கு ஆதரவாக ஆஜரான வக்கீலும் வாதம் செய்தனர். இந்த விவாதங்களை கேட்ட நீதிபதி, ஜாமீன் வழங்குவது தொடர்பான தீர்ப்பை தள்ளி வைத்தார்.
இன்று அல்லது நாளை இந்த மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே திலீப் கைது செய்யப்பட்டு வருகிற 8-ந் தேதியுடன் 90 நாட்கள் முடிவடைகிறது. அதுவரை இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால், திலீப்புக்கு ஜாமீன் கிடைத்து விடும்.
இதற்கு 5 நாட்களே இருப்பதால் அதற்குள் திலீப் மீதான குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஏற்கனவே கோர்ட்டில் தாக்கல் செய்த ஆவணங்களுடன் கூடுதல் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை போலீசார் வேகமாக திரட்டி வருகிறார்கள். இரண்டொரு நாட்களில் இந்த குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனால் திலீப்புக்கு ஜாமீன் கிடைப்பது கடினம். அவர் மீண்டும் ஜெயிலில் விசாரணை கைதியாக இருக்க வேண்டிய நிலை உருவாகும்.
கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி ஜெயிலுக்குச் சென்ற திலீப், ஜாமீனில் விடுவிக்க கோரி அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 2 முறையும் கேரள ஐகோர்ட்டில் 2 முறையும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து திலீப் 5-வது முறையாக கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக அரசு வக்கீலும், திலீப்புக்கு ஆதரவாக ஆஜரான வக்கீலும் வாதம் செய்தனர். இந்த விவாதங்களை கேட்ட நீதிபதி, ஜாமீன் வழங்குவது தொடர்பான தீர்ப்பை தள்ளி வைத்தார்.
இன்று அல்லது நாளை இந்த மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே திலீப் கைது செய்யப்பட்டு வருகிற 8-ந் தேதியுடன் 90 நாட்கள் முடிவடைகிறது. அதுவரை இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால், திலீப்புக்கு ஜாமீன் கிடைத்து விடும்.
இதற்கு 5 நாட்களே இருப்பதால் அதற்குள் திலீப் மீதான குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஏற்கனவே கோர்ட்டில் தாக்கல் செய்த ஆவணங்களுடன் கூடுதல் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை போலீசார் வேகமாக திரட்டி வருகிறார்கள். இரண்டொரு நாட்களில் இந்த குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனால் திலீப்புக்கு ஜாமீன் கிடைப்பது கடினம். அவர் மீண்டும் ஜெயிலில் விசாரணை கைதியாக இருக்க வேண்டிய நிலை உருவாகும்.
குற்றப்பத்திரிகை திலீப் திலீப் ஜாமீன் நடிகை கடத்தல் வழக்கு பாவனா பாவனா கடத்தல் வழக்கு காவ்யா மாதவன் நடிகை கடத்தல் நடிகை பாலியல் தொல்லை Dileep Bhavana Bhavana Abduction case Kavya Madhavan Actress abduction Actress Harassment harrasement Obsession actress abduction case dileep bail plea Dileep Bail Plea Dileep custody Chargesheet
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X