என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
விஜய்யுடன் டூயட் பாட ஆசை: ஐஸ்வர்யா லட்சுமி
விஜய் சேதுபதியின் ‘கவண்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர் ஐஸ்வர்யாலட்சுமி. தற்போது ‘திருப்பதி சாமி குடும்பம்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
தனது திரை உலக லட்சியம் குறித்து ஐஸ்வர்யாலட்சுமி கூறுகிறார்....
“கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ‘கவண்’ படத்தில் எனக்கு சிறிய வேடம். என்றாலும் விஜய்சேதுபதி டீமில் இருந்ததால் நானும் கவனிக்கப்பட்டேன். இதனால் ‘திருப்பதி சாமி குடும்பம்’ படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் குடும்ப பாங்கான வேடம். அடுத்து கலையரசனுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன்.
சினிமாவில் என்னை மிகவும் கவர்ந்தவர் சமந்தா. அவரைப்போல் ஒரு நல்ல நடிகையாக சினிமாவில் இடம் பிடிக்க விரும்புகிறேன். ‘கவண்’ படத்தில் நடித்தபோது எனக்கு சினிமா பற்றி நிறைய அறிவுரை சொன்னவர் விஜய்சேதுபதி. நான் பெரிய நடிகை ஆக வேண்டும் என்று அவரும் ஆசைப்படுகிறார். இப்போதும் அவரிடம் அறிவுரை கேட்டு வருகிறேன்.
நான் விஜய்யின் தீவிர ரசிகை. எதிர்காலத்தில் அவருடன் டூயட் பாட வேண்டும் என்பது எனது ஆசை. நல்லவர்களின் ஆசீர்வாதம் எனக்கு இருக்கிறது. எனவே விரைவில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆவேன்”.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்