என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு : பத்மபிரியா
Byமாலை மலர்29 Aug 2017 10:24 AM GMT (Updated: 29 Aug 2017 10:24 AM GMT)
பெயரும்-புகழும் கொண்ட பிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு என்று நடிகை பத்மபிரியா கூறியுள்ளார்.
திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆன பத்மபிரியா இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தற்போது தமிழில் ‘சிவரஞ்சினியும், இன்னும் சில பெண்களும்’, இந்தியில் ‘சீப்’, மலையாளத்தில் ‘கிராஸ்ரோடு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து பத்மபிரியா கூறும்போது, “ஒரு சினிமாவில் முக்கிய பாத்திரம் கிடைக்க வேண்டும் என்றால் நடிகை படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், சினிமா வாய்ப்பு கிடைக்காது என்றால், அதையாரால் ஏற்றுக்கொள்ள முடியும்?
புதிய நடிகைகளுக்கு மட்டுமல்ல, பெயரும்-புகழும் கொண்ட பிரபல நடிகைகளுக்கும் இதுபோன்ற விஷயங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார்கள். ஏன் என்றால் அவர்கள் சினிமாவில் இருந்தே ஆகவேண்டும் என்று நினைப்பதால் இந்த நிலை. அப்படி படுக்கையை பகிர்ந்து கொண்டவர்கள் அனைவரும் வெற்றி அடைவார்கள் என்று உறுதியாக கூறமுடியுமா?
இதுபோன்ற விஷயங்களை நான் தவிர்த்ததால் ஒதுக்கப்பட்டிருக்கிறேன். நல்ல கதை இருந்தால் தான் நான் நடிப்பேன் என்பது அவர்களுக்கு தெரியும். நடிப்பை தவிர வேறு எதுவும் என்னிடமிருந்து அவர்களுக்கு கிடைக்காது என்பதும் அவர்களுக்கு தெரியும். இதனால் தான் வேண்டாம் என்று என்னை ஒதுக்குகிறார்கள்” என்றார்.
நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து பத்மபிரியா கூறும்போது, “ஒரு சினிமாவில் முக்கிய பாத்திரம் கிடைக்க வேண்டும் என்றால் நடிகை படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், சினிமா வாய்ப்பு கிடைக்காது என்றால், அதையாரால் ஏற்றுக்கொள்ள முடியும்?
புதிய நடிகைகளுக்கு மட்டுமல்ல, பெயரும்-புகழும் கொண்ட பிரபல நடிகைகளுக்கும் இதுபோன்ற விஷயங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார்கள். ஏன் என்றால் அவர்கள் சினிமாவில் இருந்தே ஆகவேண்டும் என்று நினைப்பதால் இந்த நிலை. அப்படி படுக்கையை பகிர்ந்து கொண்டவர்கள் அனைவரும் வெற்றி அடைவார்கள் என்று உறுதியாக கூறமுடியுமா?
இதுபோன்ற விஷயங்களை நான் தவிர்த்ததால் ஒதுக்கப்பட்டிருக்கிறேன். நல்ல கதை இருந்தால் தான் நான் நடிப்பேன் என்பது அவர்களுக்கு தெரியும். நடிப்பை தவிர வேறு எதுவும் என்னிடமிருந்து அவர்களுக்கு கிடைக்காது என்பதும் அவர்களுக்கு தெரியும். இதனால் தான் வேண்டாம் என்று என்னை ஒதுக்குகிறார்கள்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X