search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்மபிரியா"

    மலையாள பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் கொடுமை அதிகரித்து வருவதாக நடிகைகள் ரேவதி, பார்வதி, ரீமாகல்லிங்கல், பத்மபிரியா ஆகியோர் ஆவேசம் பேசியுள்ளார்கள். #MeToo
    கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் ஓடும் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தற்போது நடிகர் திலீப் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு நடிகர் திலீப் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அப்போது நடிகர்சங்கத்தின் தலைவராக இன்னசென்ட் இருந்து வந்தார். அதன்பிறகு தனது உடல் நிலையை காரணம் காட்டி அவர் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

    அதன்பிறகு நடிகர் சங்க புதிய தலைவராக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் நடிகர் சங்க கூட்டத்தை கூட்டி நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் இணைத்தனர். இதற்கு பாதிக்கப்பட்ட நடிகையும், மேலும் நடிகைகள் ரீமாகல்லிங்கல், கீதுமோகன்தாஸ் உள்பட சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தங்கள் உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தனர். இதனால் தன் மீதான குற்றச்சாட்டில் தான் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை நடிகர் சங்கத்தில் இணைய விரும்பவில்லை என்று திலீப் அறிவித்ததால் இந்த பிரச்சினை சற்று ஓய்ந்தது.

    தற்போது சில நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்து வரும் சூழ்நிலையில் மலையாள பட உலகை சேர்ந்த நடிகைகளும் இது தொடர்பாக ஆவேசமாக குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

    மலையாள பெண் சினிமா கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யாநம்பீசன், அர்ச்சனா பத்மினி ஆகியோர் கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மலையாள பட உலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் ஆவேசமாக குற்றம் சாட்டினார்கள்.



    நடிகை பார்வதி கூறும் போது, நடிகை கடத்தல் சம்பவத்தில் நடிகர் திலீப்பை காப்பாற்ற நடிகர் சங்கம் முயற்சி செய்தபோதே அவர்கள் மீதான நம்பிக்கை போய்விட்டது. தங்களுக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை மாற்ற அவர்கள் அவ்வப் போது நாடகம் நடத்துகிறார்கள். பாதிக்கப்பட்ட நடிகை பற்றி அவர்களுக்கு கவலை கிடையாது என்றார்.

    புள்ளிக்காரன் ஸ்டாரா என்ற படத்தில் நான் நடித்த போது அந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகியான ஷெரின் ஸ்டான்லி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபற்றி நான் மலையாள தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தில் புகார் செய்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனக்கு பட வாய்ப்புகள் பறிபோனது தான் நடந்தது’ என்றார்.

    நடிகைகள் பேட்டியின் போது சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி சுமார் 40 நிமிடம் ஆவேசமாக பேசினார்கள். நடிகை பார்வதி பேட்டி அளிக்கும் போது கண்ணீர்விட்டு கதறினார். அவரை சக நடிகைகள் ஆறுதல் கூறி தேற்றினார்கள். 
    நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கும் திலீப்புக்கு எதிராக சில நடிகைகள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். #Dileep
    நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதான திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினர். இப்போது அவர் ஜாமீனில் வெளிவந்து இருக்கிறார்.

    சமீபத்தில் நடந்த மலையாள நடிகர் சங்க தேர்தலில் புதிய தலைவராக தேர்வான மோகன்லால் நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் திலீப்பை சங்கத்தில் சேர்த்தார்.

    இது மலையாள நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மோகன்லால் நடவடிக்கையை கண்டித்து ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் பல நடிகைகள் குற்றவாளியை எப்படி சங்கத்தில் சேர்க்கலாம் என்று விமர்சித்து நடிகர் சங்கத்துக்கு கடிதங்கள் அனுப்பினார்கள். 

    எதிர்ப்பு காரணமாக மோகன்லால் பின் வாங்கினார். கோர்ட்டில் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை சங்கத்தில் இருந்து திலீப் தள்ளி இருப்பார் என்று அறிவித்தார். அதன்பிறகு அதிருப்தி நடிகைகளை அழைத்து சமரச பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதைத்தொடர்ந்து இந்த பிரச்சினை அடங்கி இருந்தது. 

    இந்த நிலையில் நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி ஆகியோர் மீண்டும் நடிகர் சங்கத்துக்கு எதிராக கிளம்பி இருக்கிறார்கள். மூவரும் இணைந்து நடிகர் சங்க தலைவர் மோகன்லாலுக்கு மேலும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் ‘‘திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க ஏன் முடிவு எடுத்தீர்கள்? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.

    இந்த கடிதம் மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நடிகர் சங்கத் தேர்தலில் பார்வதியை போட்டியிட அனுமதிக்கவில்லை என்றும், மலையாள நடிகர் சங்கம் நடிகைகளுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் நடிகை பத்மபிரியா குற்றம்சாட்டியுள்ளார். #AMMA #MalayalamNadigarSangam #Dileep
    மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் புதிய தலைவராக போட்டியின்றி நடிகர் மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக நடைபெற்ற நடிகர் சங்க கூட்டத்தில் நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியதால் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு மலையாள நடிகைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தனர். மேலும் பல நடிகைகளும் திலீப்பை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த விவகாரம் பெரிதானது.



    இந்த நிலையில் நடிகர் சங்க தலைவர் மோகன்லால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்தார். மோகன்லால் கூறும்போது, நடிகை பலாத்கார வழக்கில் திலீப் சிக்கியதும், மம்முட்டி வீட்டில் அவசரமாக செயற்குழு கூட்டம் நடத்தி திலீப்பை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது நடந்தது அதிகாரப்பூர்வமான கூட்டம் இல்லை என்பதால் அடுத்த கூட்டத்தில் இதுபற்றி பேசி திலீப் நீக்கம் பற்றி இறுதி முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நடிகர் சங்க கூட்டத்தில் திலீப்பை மீண்டும் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதுபற்றி கூட்ட அஜண்டாவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் முதலில் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திலீப்பை சேர்த்த பிறகு எதிர்க்கிறார்கள். வழக்கில் இருந்து விடுதலை ஆகும் வரை திலீப் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்க மாட்டார். பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாகவே நடிகர் சங்கம் உள்ளது.



    நடிகை பாவனா, ரம்யா நம்பீசன் ஆகியோரின் ராஜினாமா கடிதம் மட்டும் தான் கிடைத்துள்ளது. மற்றவர்கள் கடிதம் எதுவும் எங்களுக்கு வரவில்லை. நடிகைகள் தேர்தலில் போட்டியிட யாரும் அவர்களுக்கு தடை விதிக்கவில்லை. நடிகர் சங்கம் கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் நடிகர் மோகன்லாலின் கருத்துகளுக்கு நடிகை பத்மபிரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மலையாள நடிகர் சங்கத்தில் ஜனநாயகம் இல்லை. இந்த சங்கம் நடிகைகளுக்கு எதிராகதான் செயல்படுகிறது. நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட பார்வதி முடிவு செய்தபோது அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. தற்போதைய பொதுச் செயலாளர் இடைவேளை பாபு அவரை போட்டியிட விடாமல் தடுத்தார்.



    நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்ப்பது பற்றி எந்தவித தகவலும் கூட்ட அஜண்டாவில் தெரிவிக்கப்படவில்லை.

    இரண்டு நடிகைகளின் ராஜினாமா கடிதம் மட்டும் தான் கிடைத்துள்ளது என்று மோகன்லால் ஏன் கூறுகிறார் என்று தெரியவில்லை. 4 நடிகைகள் ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் நடிகை பத்மபிரியாவின் குற்றச்சாட்டை நடிகர் சங்க பொதுச் செயலாளர் இடைவேளை பாபு மறுத்துள்ளார். பத்மபிரியாவின் குற்றச்சாட்டு தவறானது என்றும், அவர் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவதை தான் தடுக்கவில்லை என்றும் கூறி உள்ளார். #AMMA #MalayalamNadigarSangam #Dileep #Padmapriya

    ×