என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அரவிந்த் சாமி படத்தில் நிகிஷா படேல்
Byமாலை மலர்21 Aug 2017 11:32 AM GMT (Updated: 21 Aug 2017 11:32 AM GMT)
சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடித்து வரும் ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் நிகிஷா படேல் நடித்துள்ளார்.
தமிழில் தலைவன், நாரதன், 7 நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிகிஷா படேல். இவர் தற்போது அரவிந்த் சாமி நடித்து வரும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் நடித்துள்ளார். ஆனால் கதாநாயகியாக அல்ல, சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
அரவிந்த் சாமி தற்போது சித்திக் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் இயக்கிய ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மம்முட்டி, நயன்தாரா இணைந்து நடித்த இந்த படத்தைத் தமிழில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் சித்திக் ரீமேக் செய்து வருகிறார். இதில் அரவிந்த் சாமியும் அமலா பாலும் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த படம் குறித்து நிகிஷா படேல் கூறும்போது, “இந்தப் படத்தில் நான் ஒரு நடிகை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். சென்னையில் நடைபெற்ற மூன்று நாள் படப்பிடிப்பில் அரவிந்த் சாமி மற்றும் அமலா பாலோடு இணைந்து நடித்தேன். சிறப்புத் தோற்றம் என்றாலும் இந்தக் கதாபாத்திரம் கதையோடு தொடர்புகொண்டது. இதன் மலையாளப் பதிப்பில் இந்த வேடத்தில் இஷா தல்வார் நடித்திருந்தார். நான் பணியாற்றிய பணிவான நடிகர்களில் அரவிந்த் சாமியும் ஒருவர். அவரது நிறைய குணநலன்கள் எனது முதல் கன்னடப் படத்தில் என்னோடு இணைந்து நடித்த பவண் கல்யாணுடன் ஒத்துப்போகின்றன” என்றார்.
அரவிந்த் சாமி தற்போது சித்திக் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் இயக்கிய ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மம்முட்டி, நயன்தாரா இணைந்து நடித்த இந்த படத்தைத் தமிழில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் சித்திக் ரீமேக் செய்து வருகிறார். இதில் அரவிந்த் சாமியும் அமலா பாலும் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த படம் குறித்து நிகிஷா படேல் கூறும்போது, “இந்தப் படத்தில் நான் ஒரு நடிகை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். சென்னையில் நடைபெற்ற மூன்று நாள் படப்பிடிப்பில் அரவிந்த் சாமி மற்றும் அமலா பாலோடு இணைந்து நடித்தேன். சிறப்புத் தோற்றம் என்றாலும் இந்தக் கதாபாத்திரம் கதையோடு தொடர்புகொண்டது. இதன் மலையாளப் பதிப்பில் இந்த வேடத்தில் இஷா தல்வார் நடித்திருந்தார். நான் பணியாற்றிய பணிவான நடிகர்களில் அரவிந்த் சாமியும் ஒருவர். அவரது நிறைய குணநலன்கள் எனது முதல் கன்னடப் படத்தில் என்னோடு இணைந்து நடித்த பவண் கல்யாணுடன் ஒத்துப்போகின்றன” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X