search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nikesha Patel"

    சரண் இயக்கத்தில் ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் ஆதிக்கம் செலுத்தும் வேடத்தில் நிகிஷா படேல் நடித்துள்ளார்.
    ஆரவ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். சரண் இயக்கி வரும் இப்படத்தில் தற்போது நிகிஷா படேல் இணைந்து நடித்து வருகிறார்.

    இதுகுறித்து நிகிஷா படேல் கூறும்போது, ‘நான் இந்த படத்தில் ஆரவ்வின் காதலியாக நடித்திருக்கிறேன். மேலும் படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். இயக்குநர் சரண் என்னை மிகவும் பேஷனான கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளார்’ என்றார்.



    மேலும், எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் திகில் படத்திலும் நிகிஷா படேல் இணைந்து நடித்துள்ளார்.
    தமிழில் தலைவன், என்னமோ ஏதோ, நாரதன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை நிகிஷா படேல், அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். #NikeshaPatel
    தமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவராக இருக்கிறார் நடிகை நிகிஷா படேல். அரவிந்தசாமி நடிப்பில் வெளியான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த நிகிஷா படேல் தற்போது இயக்குநர் எழில் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷோடு நடித்து வருகிறார்.

    எழில் இயக்கும் படம் எதுவாக இருந்தாலும் அதில் ஹீரோவிற்கு போலவே ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கும். அதனால் இப்படத்திற்குப் பிறகு தமிழில் நிகிஷா படேல் கவனம் ஈர்க்கும் நாயகியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படம் பற்றி நடிகை நிகிஷா படேல் கூறியதாவது, "இந்தப் படத்தில் நான் ஐடி நிறுவன ஊழியராக நடிக்கிறேன். படத்தின் நகைச்சுவை பகுதியின் ஆன்மாவே நான் தான் என்று சொல்லலாம். முதல் நாள் படப்பிடிப்பில் யோகா செய்யும் காட்சி படமாக்கட்டது. ஜிவி பிரகாஷுடன் அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அவர் தனிநபராகவும் திரைநட்சத்திரமாகவும் நேசிக்கத்தக்க நபர். அவருடைய காமெடி டைமிங் எல்லாம் ஜோர். 



    எழில் சாருடைய படங்கள் எப்போதுமே குடும்பத்துடன் ரசிக்கும் அளவுக்கும் இருக்கும். பிரச்சினைகளை மறந்து சிரித்துக் கொண்டே இருக்கலாம். எழில் சாரை நான் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன். எத்தனையோ கதைகள் பற்றி ஆலோசித்திருந்தாலும் இந்த கேரக்டர் எனக்குப் பொருந்திப் போயிற்று. எழில் சார் மிகவும் அமைதியான நபர். கடினமாக உழைக்கும் இயக்குநரும் கூட. இந்த கதை மீது எழில் சார் சிறப்பான பார்வை கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் நாங்கள் ஒன்றாகப் பணியாற்றியதில் எனக்கு மகிழ்ச்சி. இன்னும் நிறைய படங்களில் அவருடன் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்றார்.
    பாண்டி முனி படத்தில் பிசியாக நடித்து வரும் நிகிஷா பட்டேல், தன்னைப் பற்றி வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து, அவர் எனக்கு நண்பர் மட்டும்தான் என்று கூறியிருக்கிறார். #NikeshaPatel
    தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக 'புலி' படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழ் சினிமாவுக்கு ‘தலைவன்’  படத்தின் மூலம் அறிமுகமானார். 

    அதன் பிறகு ‘என்னமோ ஏதோ’  படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இதையடுத்து 'கரையோரம்', 'நாரதன்', '7 நாட்கள்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

    தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் பாண்டி முனி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் நிகிஷா படேல். இவர் பிரபுதேவாவை தனக்கு பிடிக்கும் என்றும், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் செய்திகள் வெளியானது. இது திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.



    இதை நிகிஷா பட்டேல் மறுத்துள்ளார். பிரபுதேவாவை நான் திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுவதாக வந்த செய்திகள் உண்மையில்லை. நான் யாரையும் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. பிரபுதேவா எனக்கு நண்பர் மட்டும்தான். மற்றும் என்னுடைய நலனில் அக்கறை கொண்டவர். நான் அவரை சார் என்றுதான் கூறுவேன்’ என்று கூறியிருக்கிறார்.
    இயக்குனர், தயாரிப்பாளர், டான்சர், நடன இயக்குனராக இருக்கும் பிரபுதேவை, தற்போது பல படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். #Prabhudeva
    தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் பாண்டி முனி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் நிகிஷா படேல். இதையடுத்து, இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்துள்ளது. இதன் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நிகிஷா கூறுகையில், தனக்கு இந்தி படங்களில் வாய்ப்பு வரும் நிலையில், முன்னணி நடிகருக்கு ஜோடியாகவும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

    கொமரம் புலி என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர், கடந்த 2014ம் ஆண்டு வந்த தலைவன் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில், பிரபுதேவாவை தனக்கு பிடிக்கும் என்றும், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் 3ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாடிய பிரபுதேவாவுக்கு தனக்கேயுரிய பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பிரபுதேவா. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், டான்சர், நடன இயக்குனராக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், ஏற்கனவே நயன்தாராவுடன் காதல் கொண்டிருந்த பிரபுதேவா, அவரது மனைவியிடமும் விவாகரத்து பெற்றார். இதையடுத்து நெருக்கமாக இருந்த பிரபுதேவா – நயன்தாரா காதலும் திடீரென்று முறிந்தது. 

    இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை நிகிஷா படேல் 45 வயதாகும் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். 
    ×