என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிகை கடத்தல் வழக்கில் ஜெயில்: வக்கீலை மாற்ற திலீப் முடிவு
Byமாலை மலர்4 Aug 2017 8:26 AM GMT (Updated: 4 Aug 2017 8:26 AM GMT)
நடிகை கடத்தல் வழக்கில் ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் நடிகர் திலீப் தனது வக்கீலை மாற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஐகோர்ட்டில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் ஓடும் காரில் நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய குற்வாளியான ரவுடி பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படை யில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
தற்போது நடிகர் திலீப் ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். தன்னை ஜாமீனில் விடுவிக்க கேட்டு திலீப் ஏற்கனவே அங்கமாலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிலும், கேரள ஐகோர்ட்டிலும் தனது வக்கீல் மூலம் மனுதாக்கல் செய்திருந்தார்.
ஆனால் நடிகர் திலீப்பின் ஜாமீன்மனு இந்த 2 கோர்ட்டி லும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் திலீப் தொடர்ந்து ஜெயிலிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் திலீப் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடிவு செய்தார். இது தொடர்பாக தனது வக்கீலுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஆனால் தற்போது கற்பழிப்பு புகார் போன்ற வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டில் சுலபமாக ஜாமீன் பெற முடியாத நிலை உள்ளது.
இதுபற்றி திலீப்பிடம் அவரது வக்கீல் கூறியதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன்மனு தாக்கல் செய்யும் முடிவை திலீப் மாற்றிக்கொண்டார்.
அதேசமயம் மீண்டும் கேரள ஐகோர்ட்டிலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்யவும் திலீப் திட்டமிட்டு உள்ளார். மேலும் இந்த வழக்கில் தனக்கு ஆதரவாக வாதாடி வரும் வக்கீல் மீது நடிகர் திலீப்புக்கு அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. எனவே அவர் வேறு ஒரு வக்கீலை நியமித்து அவர் மூலம் புதிய ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.
தன்னை ஜெயிலில் பார்க்க வந்த நெருங்கிய உறவினர் ஒருவரிடம் திலீப் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளார். எனவே விரைவில் புதிய வக்கீல் திலீப் வழக்கில் ஆஜராகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
நடிகைகள் மஞ்சுவாரியர், காவ்யாமாதவன் ஆகி யோரை நடிகர் திலீப் திருமணம் செய்வதற்கு முன்பு ஏற்கனவே உறவுப் பெண் ஒருவரை திருமணம் செய்ததாக தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது இந்த வழக்கை திசைதிருப்ப போலீசாரால் பரப்பப்படும் தகவல் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. அதே சமயம் திலீப்பின் முதல் திருமணம் பற்றி மலையாள திரையுலகை சேர்ந்த சிலருக்கு தெரியும் என்றும் கூறப்படுகிறது.
மலையாள நடிகர் அபி என்பவர் நடிகர் திலீப்பின் முதல் திருமணத்திற்கு சாட்சியாக இருந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி நடிகர் அபி கூறும்போது திலீப்பின் முதல் திருமணம் பற்றிய தகவல் எனக்கு புதியதல்ல. அதுபற்றி எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் அவர்கள் திருமணத்திற்கு நான் சாட்சி கையெழுத்து எதுவும் போடவில்லை என்றார். நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக ஏற்கனவே நடிகர் அபியிடம் போலீசார் விசாரணை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகர் திலீப் ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். தன்னை ஜாமீனில் விடுவிக்க கேட்டு திலீப் ஏற்கனவே அங்கமாலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிலும், கேரள ஐகோர்ட்டிலும் தனது வக்கீல் மூலம் மனுதாக்கல் செய்திருந்தார்.
ஆனால் நடிகர் திலீப்பின் ஜாமீன்மனு இந்த 2 கோர்ட்டி லும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் திலீப் தொடர்ந்து ஜெயிலிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் திலீப் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடிவு செய்தார். இது தொடர்பாக தனது வக்கீலுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஆனால் தற்போது கற்பழிப்பு புகார் போன்ற வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டில் சுலபமாக ஜாமீன் பெற முடியாத நிலை உள்ளது.
இதுபற்றி திலீப்பிடம் அவரது வக்கீல் கூறியதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன்மனு தாக்கல் செய்யும் முடிவை திலீப் மாற்றிக்கொண்டார்.
அதேசமயம் மீண்டும் கேரள ஐகோர்ட்டிலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்யவும் திலீப் திட்டமிட்டு உள்ளார். மேலும் இந்த வழக்கில் தனக்கு ஆதரவாக வாதாடி வரும் வக்கீல் மீது நடிகர் திலீப்புக்கு அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. எனவே அவர் வேறு ஒரு வக்கீலை நியமித்து அவர் மூலம் புதிய ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.
தன்னை ஜெயிலில் பார்க்க வந்த நெருங்கிய உறவினர் ஒருவரிடம் திலீப் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளார். எனவே விரைவில் புதிய வக்கீல் திலீப் வழக்கில் ஆஜராகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
நடிகைகள் மஞ்சுவாரியர், காவ்யாமாதவன் ஆகி யோரை நடிகர் திலீப் திருமணம் செய்வதற்கு முன்பு ஏற்கனவே உறவுப் பெண் ஒருவரை திருமணம் செய்ததாக தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது இந்த வழக்கை திசைதிருப்ப போலீசாரால் பரப்பப்படும் தகவல் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. அதே சமயம் திலீப்பின் முதல் திருமணம் பற்றி மலையாள திரையுலகை சேர்ந்த சிலருக்கு தெரியும் என்றும் கூறப்படுகிறது.
மலையாள நடிகர் அபி என்பவர் நடிகர் திலீப்பின் முதல் திருமணத்திற்கு சாட்சியாக இருந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி நடிகர் அபி கூறும்போது திலீப்பின் முதல் திருமணம் பற்றிய தகவல் எனக்கு புதியதல்ல. அதுபற்றி எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் அவர்கள் திருமணத்திற்கு நான் சாட்சி கையெழுத்து எதுவும் போடவில்லை என்றார். நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக ஏற்கனவே நடிகர் அபியிடம் போலீசார் விசாரணை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை கடத்தல் வழக்கு மஞ்சு வாரியார் திலீப் பாவனா பாவனா கடத்தல் வழக்கு காவ்யா மாதவன் ரகசிய திருமணம் நடிகை கடத்தல் நடிகை பாலியல் தொல்லை திலீப் ஜாமீன் Manju Warrier Dileep Bhavana Bhavana Abduction case Kavya Madhavan Secret Marriage Actress abduction Actress Harassment harrasement Obsession actress abduction case dileep bail plea
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X