search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரகசிய திருமணம்"

    நாகர்கோவிலில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் பழகி ஒருவரை ரகசிய திருமணம் செய்து குடும்பம் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டியை அடுத்த கேசவன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரவின் ஜோஸ் (வயது 27). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பிரவின் ஜோஸ் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தினமும் வேலைக்கு வரும் போது பூதப்பாண்டியை அடுத்த சீதப்பால் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் அந்த பெண்ணும், பிரவின் ஜோசும் காதலில் விழுந்தனர். அடிக்கடி தனியாக சந்தித்து காதலை வளர்த்தனர்.

    பிரவின் ஜோஸ், சீதப்பால் பெண்ணை திருமணம் செய்வதாக உறுதி கூறியிருந்தார். இதனால் அந்த பெண், பிரவின் ஜோஸ் தன்னை திருமணம் செய்வார் என்று உறுதியாக இருந்தார்.

    இந்த நிலையில் பிரவின் ஜோசை கடந்த சில நாட்களாக காணவில்லை. உறவினர்கள் அவரை தேடிய போது பிரவின் ஜோஸ், ஆரல்வாய்மொழியை சேர்ந்த இன்னொரு இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்திருப்பது தெரியவந்தது.

    சீதப்பால் பெண்ணை காதலித்து வந்த போதே பிரவின் ஜோஸ் , ஆரல்வாய்மொழி பெண்ணுடனும் நட்பில் இருந்தது தெரியவந்தது. இருவரும் கடந்த 18-ந் தேதி நாகர்கோவிலில் இருந்து ஓசூருக்கு சென்று அங்கு தங்கியிருந்தனர்.

    உறவினர்கள் தேடுவதை அறிந்ததும் இருவரும் கடந்த 23-ந் தேதி நாகர்கோவில் வந்தனர். இங்கு பள்ளிவிளை பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். பிரவின் ஜோஸ், பள்ளிவிளை வீட்டில் இருந்து மீண்டும் வேலைக்கு சென்று வந்தார்.

    இதற்கிடையே 2 வாரங்களாக காதலனை பார்க்க முடியாமல் தவித்த சீதப்பால் பெண், பிரவின் ஜோசை தொடர்பு கொண்டு பேசினார். உடனடியாக ஊருக்கு வரும் படி அழைத்த அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.

    இதையடுத்து கடந்த 26-ந் தேதி அவர், பூதப்பாண்டியில் உள்ள பதிவு அலுவலகத்திற்கு சீதப்பால் பெண்ணை அழைத்து சென்றார். அங்கு சீதப்பால் பெண்ணை அவர் பதிவு திருமணம் செய்து கொண்டார்.

    பிரவின் ஜோஸ், சீதப்பால் பெண்ணை திருமணம் செய்த தகவல் பள்ளிவிளையில் தங்க வைக்கப்பட்ட ஆரல்வாய்மொழி பெண்ணுக்கு தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி தன் உறவினர்களுக்கு தெரிவித்தார்.

    சீதப்பால் பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்ட பிரவின் ஜோஸ், தன்னை ஏமாற்றி ஓசூர் அழைத்து சென்று கற்பழித்து விட்டதாக கூறி புலம்பினார். இது பற்றி தகவல் அறிந்த ஆரல்வாய் மொழி பெண்ணின் உறவினர்கள் பள்ளிவிளை வந்தனர்.

    சீதப்பால் பெண்ணை திருமணம் செய்த பின்பு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்த பிரவின் ஜோஸ், பள்ளிவிளையில் குடிவைத்த ஆரல்வாய்மொழி பெண்ணை சந்திக்க வந்தார்.

    ஏற்கனவே இந்த விபரம் தெரிந்து அங்கு வந்திருந்த ஆரல்வாய்மொழி பெண்ணின் உறவினர்கள், பிரவின் ஜோசை பிடித்து கொண்டனர். அவர் சீதப்பால் பெண்ணை திருமணம் செய்தது உண்மை தானா? என்று கேட்டனர். குட்டு உடைந்து விட்டதால் அதிர்ந்து போன பிரவின் ஜோஸ் ஏதும் பேசாமல் தலை கவிழ்ந்து நின்றார்.

    இதையடுத்து ஆரல்வாய்மொழி பெண்ணின் உறவினர்கள் இது பற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தனர். இதையடுத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சீதப்பால், ஆரல்வாய்மொழி பெண்களின் உறவினர்கள் திரண்டு வந்தனர்.

    நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடிவிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி பெண், பிரவின் ஜோஸ் மீது முறைப்படி புகார் கொடுத்தார்

    ஆரல்வாய்மொழி பெண் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் மகளிர் போலீசார் பிரவின் ஜோஸ் மீது இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.

    பின்னர் பிரவின் ஜோசை கைது செய்த போலீசார் அவரை ஜெயிலில் அடைத்தனர். ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் பழகி ஒருவரை ரகசிய திருமணம் செய்ததால் சிக்கி கொண்ட பிரவின் ஜோஸ் இப்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கணவரை சேர்த்து வைக்ககோரி ரகசிய திருமணம் செய்த ஆசிரியை எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்துள்ளார்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சகாயபுரத்தை சேர்ந்தவர் ஷீலா (வயது 30). இவர் இன்று காலை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் காங்கயம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் போது வெள்ள கோவிலை சேர்ந்த கவின்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

    நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் கடந்த 10.4.17 அன்று பெருந்துறையில் உள்ள ஒரு கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டோம்.

    பிறகு அவரவர் வீட்டுக்கு சென்று விட்டோம். அவ்வப் போது சந்தித்து ஊட்டி, ஏற்காடு போன்ற ஊர்களுக்கு போய் வந்தோம்.

    இந்த நிலையில் நான் கர்ப்பம் ஆனேன். ஆனால் கணவரின் வற்புறுத்தலால் கர்ப்பத்தை கலைத்து விட்டேன்.

    இந்த நிலையில் எங்களது திருமணம் வி‌ஷயம் தெரிய வர கணவர் வீட்டில் உள்ளவர்கள் என்னை மிரட்டுகிறார்கள். திருமணம் செய்ததாக கூறினால் கொன்று விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.

    எனது காதல் கணவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு என்னுடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டார்.

    இதனால் எனக்கு பாதுகாப்பு கொடுத்து காதல் கணவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்.

    இவ்வாறு ஆசிரியை ஷீலா அந்த மனுவில் கூறி உள்ளார். 

    ×