search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மீண்டும் விஷாலுடன் இணைகிறாரா வரலட்சுமி?
    X

    மீண்டும் விஷாலுடன் இணைகிறாரா வரலட்சுமி?

    ‘மதகஜராஜா’ படத்திற்கு பிறகு மீண்டும் விஷாலும், வரலட்சுமியும் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    விஷால்-வரலட்சுமி நடிப்பில் உருவான ‘மதகஜராஜா’ படம் முடிவடைந்தும் ஒருசில பிரச்சினைகளால் இன்னமும் ரிலீசாகாமல் முடங்கியே உள்ளது. இப்படத்தை வெளியிட விஷால் தரப்பிலும் கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், அதுவும் தடங்கலாகவே தற்போது வரைக்கும் அப்படம் ரிலீசாகுமா? ரிலீசாகாதா? என்ற மிகப்பெரிய சந்தேகம் உள்ளது.

    இந்நிலையில் விஷாலும், வரலட்சுமியும் மீண்டும் இணையவுள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



    கடந்த பிப்ரவரி மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகியாக ஏற்கெனவே கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

    இந்நிலையில், வரலட்சுமியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. வரலட்சுமி இப்படத்தில் வில்லியாக நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் தற்போது ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×