என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மராத்தி பட தயாரிப்பாளர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்15 May 2017 5:44 AM GMT (Updated: 15 May 2017 5:44 AM GMT)
மராத்தி பட தயாரிப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக அவர் ‘பேஸ்புக்’கில் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து உருக்கமாக பதிவு செய்து உள்ளார்.
புனே மாவட்டம் பிம்புலே நிலக்பகுதியை சேர்ந்தவர் அதுல் தப்கிர். “டோல் தசா” என்ற மராத்தி படத்தை தயாரித்தவர். இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று அவர் தன் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறையின் கதவை தட்டி பார்த்தனர்.
ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அறைக்குள் அதுல் தப்கிர் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய சோதனையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் தனது விபரீத முடிவுக்கான காரணம் குறித்த கடிதத்தை “பேஸ்புக்” பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது, அதுல் தப்கிர் தயாரித்த “டோல் தசா” படம் சரியாக ஓடாததால் அவர் பெரும் நஷ்டத்திற்கும், கடன் சுமைக்கும் ஆளானார். இது அவரது குடும்ப வாழ்க்கையிலும் எதிரொலித்தது. அதுல் தப்கிருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு உருவானது. இந்த நிலையில் குடும்ப தகராறு தொடர்பாக அதுல் தப்கிர் மீதும், அவரது தந்தை மீதும் மனைவி போலீசில் புகார் கொடுத்தார். இதில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க போலீசார் அதுல் தப்கிரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை பறித்துள்ளனர். இவ்வாறு நெருக்கடிக்கு ஆளானதால் தான் தற்கொலை செய்துகொள்வதாக அந்த பதிவில் அதுல் தப்கிர் உருக்கமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அறைக்குள் அதுல் தப்கிர் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய சோதனையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் தனது விபரீத முடிவுக்கான காரணம் குறித்த கடிதத்தை “பேஸ்புக்” பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது, அதுல் தப்கிர் தயாரித்த “டோல் தசா” படம் சரியாக ஓடாததால் அவர் பெரும் நஷ்டத்திற்கும், கடன் சுமைக்கும் ஆளானார். இது அவரது குடும்ப வாழ்க்கையிலும் எதிரொலித்தது. அதுல் தப்கிருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு உருவானது. இந்த நிலையில் குடும்ப தகராறு தொடர்பாக அதுல் தப்கிர் மீதும், அவரது தந்தை மீதும் மனைவி போலீசில் புகார் கொடுத்தார். இதில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க போலீசார் அதுல் தப்கிரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை பறித்துள்ளனர். இவ்வாறு நெருக்கடிக்கு ஆளானதால் தான் தற்கொலை செய்துகொள்வதாக அந்த பதிவில் அதுல் தப்கிர் உருக்கமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X