என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
இணையதளத்தில் பாகுபலி-2: கமிஷனர் அலுவலகத்தில் விஷால் புகார்
‘பாகுபலி-2’ படம் கடந்த ஏப்ரல் 28-ந் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலேயே இப்படம் ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணையதளத்திலும் வெளியானது. இதுகுறித்து, நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கூறி இருப்பதாவது:- சமீபத்தில் வெளியான 'பாகுபலி-2' திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதேபோல் புது படங்கள் அனைத்தும் அந்த இணையத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ‘பாகுபலி-2’ படம் இணையதளத்தில் வெளியான பிறகும்கூட இதுவரையில் இந்திய சினிமாவில் எந்தவொரு சினிமாவும் செய்யாத வசூல் சாதனையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்