என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மீண்டும் ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் இணைந்த சந்தோஷ் நாராயணன்
Byமாலை மலர்6 May 2017 6:22 AM GMT (Updated: 6 May 2017 6:22 AM GMT)
ரஜினி - பா.ரஞ்சித் இணையும் புதிய படத்தில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த ‘கபாலி’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்திலும் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவிருக்கிறார்.
இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை பா.ரஞ்சித் மேற்கொண்டு வருகிறார். அதேபோல், நடிகர், நடிகையர் தேர்வும், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. அதில், தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, ‘கபாலி’ படத்திற்கும் சந்தோஷ் நாராயணன்தான் இசையமைத்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படமும் தாதா பற்றிய கதையாக உருவாகவிருக்கிறது. வருகிற மே 28-ந் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை பா.ரஞ்சித் மேற்கொண்டு வருகிறார். அதேபோல், நடிகர், நடிகையர் தேர்வும், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. அதில், தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, ‘கபாலி’ படத்திற்கும் சந்தோஷ் நாராயணன்தான் இசையமைத்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படமும் தாதா பற்றிய கதையாக உருவாகவிருக்கிறது. வருகிற மே 28-ந் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X