search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "‘நம்ம ஊரு சூப்பரு’"

    • தமிழ்நாடு அரசால் ‘நம்ம ஊரு சூப்பரு” என்ற முனைப்பு இயக்கமானது இன்று செயல்படுத்தப்படவுள்ளது.
    • கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்ம ஊரு சூப்பரு தூய்மை மற்றும் சுகாதார சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் துடுப்பதி ஊராட்சியில் கிருஷ்ணனுண்ணி நம்ம ஊரு சூப்பரு தூய்மை மற்றும் சுகாதார சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    நம்ம ஊரு சூப்பர்

    தமிழ்நாடு அரசால் 'நம்ம ஊரு சூப்பரு" என்ற முனைப்பு இயக்கமானது இன்று செயல்படுத்தப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது, கிராம சமுதாயத்தில் பாதுகாப்பான சுகாதாரம் முறைகள் கடைபிடித்தல், குப்பை தரம் பிரித்தல், கழிவுகளை குறைத்தல், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

    பாதுகாப்பான குடிநீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திரவ கழிவு மேலாண்மை செயல்பாடு, பொது வெளியில் குப்பை–கள் போடுவதை தடுத்தல், நீர்நிலை பாதுகாத்தல் மற்றும் சுற்றுப்புறம் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகும்.

    அதன்படி வருகின்ற 2-ந் தேதி வரை பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் சுத்தம் செய்தல், கல்லூரி மற்றும் பள்ளிகளில் சுகாதாரம், குடிநீர், கழிவு மேலாண்மை மற்றும் தன்சுத்தம் குறித்து விழிப்பு–ணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    மேலும் 3-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவி குழு உறுப்பி–னர்கள், சமூக நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை மூலம் குப்பை தரம் பிரித்தல் குறித்து வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும், 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்த்தல் குறித்து சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேலும் அடுத்த மாதம் 24-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை சுத்தம் மற்றும் பசுமையான கிராமம் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இறுதியாக கிராம சபாவில் தீர்மானம் இயற்றுதல் போன்ற நடவடி–க்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    அந்த வகையில், இன்று சிறப்பு முகாமின் முதற்கட்ட–மாக பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி துடுப்பதி குக்கி–ராமத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக்காவலர்களை கொண்டு சுத்தம் செய்யும் பணி தொடங்கி வைக்கப்ப–ட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்ம ஊரு சூப்பரு தூய்மை மற்றும் சுகாதார சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

    தொடர்ந்து, துடுப்பதி ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் ரூ.22.40 லட்சம் மதிப்பீட்டில் அமைந்துள்ள சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் மையத்தினையும் மற்றும் அதே இடத்தில் அமைந்துள்ள நர்சரியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பேச்சு
    • அனைத்துத்துறை அலுவலர்கள் ஒன்றினைந்து பணியாற்றிட வேண்டும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் "நம்ம ஊரு சூப்பரு" அளவிலான பல்துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை கிராம ஊராட்சி பகுதிகளில் நடைபெற உள்ள நீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை பற்றிய மக்களின் பங்கேற்புடன் கூடிய "நம்ம ஊரு சூப்பரு" எனும் மாபெரும் சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் செயல்பாடுகள் மேற்கொள்ளும் பொருட்டு சிறப்பாக நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும்.

    நேற்று (20-ந்தேதி) முதல் அடுத்த மாதம் (2-ந்தேதி) வரை ஊரகப் பூங்காக்கள், பஸ் நிறுத்தங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற பொது இடங்களும் , நீர்நிலைகளும் சுத்தம் செய்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டும். வருகிற 27-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை பள்ளி மற்றும் தொடர்பான செயல்பாடுகள் கல்லூரி களில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை மேற்கொள்ள வேண்டும்.

    அடுத்த மாதம் 3-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஊரகப்பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் சுய உதவிக்குழு மூலமாக நீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். 17-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்திடும் வகையில் விழிப்புணர்வு செயல்பாடு கள் மேற்கொள்ள வேண்டும்.

    அடுத்த மாதம் 24-ந் தேதி முதல் 01.10.2022 வரை சுத்தமான மற்றும் பசுமையான கிராமங்கள் திட்டத்திற்காக வீடுகள், பள்ளிகள், அங்கன் வாடி மையங்கள் போன்ற வற்றில் கீரைகள், முருங்கை, நெல்லி, பப்பாளி, இனிப்பு கிழங்கு போன்ற ஊட்டச்சத்து தோட்டங்களை ஊக்குவிக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

    2.10.2022 அன்று சிறப்பு பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் இல்லாத கிராமங்களை உருவாக்குதல், பாதுகாப்பான துப்புரவு மற்றும் திட திரவ கழிவுக்காக வழங்கப்படும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளின் செயல்பாட்டை உறுதி செய்தல் .

    பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிப்பதுடன், பொது இடங்களில் குப்பை இல்லா மலும், திறந்தவெளியில் மலங்கழித்தலற்ற நிலை யினை உறுதி செய்தல், பயன்பாட்டிலிருக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்ய வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும், இப்பணிகளை மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அனைத் துத்துறை அலுவலர்கள் ஒன்றினைந்து பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×